Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் பணம் பறித்ததாக வழக்கு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதாகக் கூறி பணம் பறித்ததாக ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து 930 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக பாசி நிறுவனத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய நிதி நிறுவன இயக்குனர் கமலவள்ளி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

CHENNAI COURT FRAUD

சில நாட்களில் திரும்பி வந்த கமலவள்ளி, வழக்கில் இருந்து விடுவிப்பதாகக் கூறி, 3 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக ஆனைமலை காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் மோகன்ராஜ், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு அப்போதைய ஆய்வாளர் சண்முகையா ஆகியோருக்கு எதிராக புகார் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், அப்போது மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மற்றும் போலீசாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தது. இதை எதிர்த்து பிரமோத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி விவேக் குமார் சிங் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பிரமோத் குமார் லஞ்சம் கேட்டு பெற்றார் என்பதை நிரூபிக்க சிபிஐ தவறி விட்டதாகவும், அவர் சார்பாக மற்றவர்கள் வாங்கினார்கள் என குற்றம் சாட்டியது வெறும் யூகத்தின் அடிப்படையிலானது எனக் கூறினார்.

மேலும், "இந்த வழக்கில் இருந்து பிரமோத் குமாரை விடுவிக்க மறுத்தும், குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தும் கோவை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை" ரத்து செய்கிறேன் என்று உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் இருந்து பிரமோத் குமாரை விடுவித்தும் நீதிபதி விவேக்குமார் சிங் உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+