வெள்ளை அறிக்கையை தாண்டி யூஸ்ஃபுல் ப்ளூ பிரிண்ட் கொடுப்பாரா விஜய்? அப்ப மொத்த காரணமும் திமுக தானா?
சென்னை: வெள்ளை அறிக்கை வெளியிட்ட தவெக அரசை, மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் விமர்சித்துள்ளார்.. தேர்தல் பிரச்சாரத்தின்போது பாட்டிலுக்கு 10 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுவதாகப் பாடினார், ஆனால் இப்போது பாட்டிலுக்கு 20 ரூபாய் வரை அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து 30, 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போதைக்கு இதில் எதுவும் மாறவில்லை என்றும் தராசு ஷ்யாம் கருத்து கூறியிருக்கிறார்.
ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஷ்யாம், "ஏற்கனவே நாம் இரண்டு வெள்ளை அறிக்கைகளைப் பார்த்திருக்கிறோம். ஒன்று 2021-ல் திமுக அரசு சார்பில் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டது, இன்னொன்று 2024-ல் மோடி அரசு வெளியிட்டது. இந்த இரண்டுமே முந்தைய அரசுகளைக் குற்றம் சாட்டுவதாகவே அமைந்திருந்தன. இப்போது புதிய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழக அரசு சார்பாக வெளியிடப்படும் நிதிநிலை வெள்ளை அறிக்கை என்பது வெறுமனே முந்தைய அரசு மீது குற்றம் சாட்டுவதாக மட்டும் இருக்கக் கூடாது.
2500 ரூபாய் மகளிருக்கு எப்போது
மாறாக, மக்களுக்கு அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான 2,500 ரூபாய் வழங்கும் திட்டம் மற்றும் பெண்களுக்கான இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்களை எப்போது, எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பதற்கான கால அட்டவணை மற்றும் புளூபிரின்ட் கொண்ட மதிப்பீடாக இருக்க வேண்டும்.
நிதிநிலை அறிக்கையில் இதற்கான வழிவகைகள் இருந்தால் மட்டுமே மக்கள் அதனை விரும்புவார்கள். அதை விடுத்து, எல்லாவற்றிற்கும் திமுகதான் காரணம், அவர்கள் ஏகப்பட்ட கடனை வைத்துவிட்டுப் போய்விட்டார்கள், கஜானா காலி என்று பழனிவேல் தியாகராஜன் பாணியில் அறிக்கை விடுவதில் பயனேதும் இல்லை.
அரசு கஜானாவில் நிதி இல்லையா
முக்கியமாக, அரசு கஜானாவில் நிதி இல்லை என்று காரணங்களைக் கூறுவதை விடுத்து, முதலமைச்சர் விஜய் முதலில் தனது சொந்த டெல்லி பயணங்களுக்கான செலவுகளைக் குறைக்க வேண்டும்.
அவர் தனி விமானத்தில் செல்வதைத் தவிர்த்துவிட்டுப் பயணிகள் விமானத்தில் தாராளமாகப் பயணம் செய்யலாம். அவர் மேற்கொண்ட டெல்லி பயணங்களுக்கு எத்தனை கோடி ரூபாய் செலவானது, அவருடன் சென்றவர்கள் யார் மற்றும் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் நலன்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விகளுக்கு இதுவரை எந்த விடையும் இல்லை.
முதலமைச்சருக்கு புரோட்டோகால் பாதுகாப்பு
முதலமைச்சருக்கு என்று அரசு வழங்கும் குறிப்பிட்ட புரோட்டோகால் பாதுகாப்பு இருக்கும்போது, அதைத் தாண்டி ஒரு தனியார் நபர் அவரோடு பாதுகாப்பு ஏஜென்டாக இருப்பது தவறான விஷயமாகும். அதில் என்ன ரகசியம் இருக்கிறது, ஏன் அவர் அதை இன்னும் பராமரிக்கிறார் என்று கேட்பதற்கே ஆள் இல்லை.
எம்.ஜி.ஆர் காலத்தில் கூட இதுபோன்ற தனிநபர்களுக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கிடைத்ததில்லை, ஆனால் இப்போது பார்த்தால் அவரே எப்போதும் முதலமைச்சருடன் கூடவே நிற்கிறார். அவருடன் கூடவே டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படும் ஹேர் டிரெஸ்ஸர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த மற்றொரு நண்பர் ஆகியோருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை.
பாட்டிலுக்கு 10 ரூபாய்
இதுபோக, அரசு மீது ஆதவ் அர்ஜுன் மற்றும் அவரது உறவினர்கள் சம்பந்தமாகப் பொதுவெளியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், அதற்கெல்லாம் அரசிடம் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பாட்டிலுக்கு 10 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுவதாகப் பாடினார், ஆனால் இப்போது பாட்டிலுக்கு 20 ரூபாய் வரை அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து 30, 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போதைக்கு இதில் எதுவும் மாறவில்லை.
அதனால் அரசு வெளியிடும் வெள்ளை அறிக்கை என்பது வெறுமனே ஒயிட் பேப்பரில் பிரிண்ட் பண்ணப்பட்ட ஒரு வெற்றறிக்கையாக இருக்கக் கூடாது. இந்த கேள்விகளுக்கெல்லாம் அது விடை கொடுத்தால் மட்டுமே அது நிஜமான வெள்ளை அறிக்கையாக இருக்கும்.
வெள்ளை அறிக்கை தவெக அரசு
இல்லாவிட்டால் இது சட்டமன்றத்தில் 2 நாட்கள் காரசாரமாக விவாதிப்பதற்கும், தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் யூடியூப் நேர்காணல்கள் கொடுப்பதற்கும் மட்டுமே உதவியாக இருக்கும். இதன் மூலமாகத் தான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து கொஞ்சம் காலம் தாழ்த்துவதற்கும், கால அவகாசம் எடுப்பதற்கும் ஒரு வாய்ப்பாக இந்த வெள்ளை அறிக்கையை அரசு பயன்படுத்துகிறதா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
வெள்ளை அறிக்கையை விட மக்கள் தங்களின் எதார்த்த வாழ்க்கையின் மூலமே உண்மையை உணர்ந்து கொள்வார்கள். உதாரணமாக, மின்வெட்டால் பாதிக்கப்பட்ட ஒருவன் வெளியில வரும்போது அவனுக்கு உண்மை தெரியப்போகிறது. ஒரு நாள், அடுத்த நாளும் மின்வெட்டு நிவர்த்தி ஆகவில்லை என்றால், அவன் வாழும் இருண்ட வாழ்க்கையை வைத்தே நிலையைத் தெரிந்து கொள்வான்.
வெற்று அறிக்கை - சலிப்பு
எனவே, வெள்ளை அறிக்கை வெற்றறிக்கையாக இல்லாமல் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்ற ஆரம்பக் கட்டத்தில் முந்தைய அரசு மீது குற்றம் சாட்டுவது ஓகே-வாக இருக்கும்.
ஆனால், போகப் போக மக்களுக்கு இதில் சலிப்பு ஏற்பட்டுவிடும். முந்தைய அரசு சரியில்லை என்பதால்தானே உங்களை மாற்றி மக்கள் ஓட்டுப் போட்டார்கள், நீங்களும் அதே குற்றச்சாட்டையே கூறினால் என்ன பயன் என்று மக்கள் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். எனவே, மீண்டும் மீண்டும் இதையே கூறுவது வெறும் அரசியலாகத்தான் இருக்கும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications