Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடையை மீறி ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ்.. அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் நீதிமன்ற உத்தரவை மீறி நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையினை மீறி டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தீர்ப்பாயம் மீண்டும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். இந்த ரெய்டில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதனை தொடர்ந்து ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

madras-high-court-condemns-ed-for-sending-notice-to-akash-bhaskaran-in-violation-of-court-order

அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா

இந்த ரெய்டுக்கு பிறகு இருவரது வீடுகளும் சீல் வைக்கப்பட்டது. அமலாகக்த்துறையின் இந்த நவடிக்கையினை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகிய இருவரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லக்‌ஷ்மி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது எதன் அடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது என்று அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் பதில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை பார்த்த நீதிபதிகள், இது வெறும் தகவல்களாக உள்ளது. ஆவணங்கள் எங்கே? வீட்டில் சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

நீதிமன்றம் தடை விதித்தும் நோட்டீஸ்

தொடர்ந்து அமலாக்கத்துறைக்கு சீல் வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனால் சீலை அகற்றி, நோட்டீஸை எடுத்துவிடுகிறோம் என்று அமலாக்கத்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை என்று நீதிபதிகள் கூறினர்.

தொடர்ந்து டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையின் மேல் நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்த வழக்கில் எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையிலும், ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை தீர்ப்பாய அதிகாரி கடந்த ஜூலை 11 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்றும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

வேண்டுமென்றே மீறியுள்ளது

இதற்கு அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர், "இந்த வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கும் முன்பாகவே மனுதாரரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தீர்ப்பாயத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்த நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது" என்று பதில் அளித்தார்.

ஆனால் அமலாக்கத்துறை வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், "ஒவ்வொரு முறையும் அமலாக்கத்துறை இப்படி செயல்பட்டதாலேயே இந்த இடைக்கால தடை விதித்தோம். தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பினால் இதை ஏற்க முடியாது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமலாக்கத் துறை வேண்டுமென்றே மீறியிருப்பது கண்டனத்துக்குரியது. மனுதாரர் விரும்பினால் அவமதிப்பு வழக்கு தொடரலாம்" என்று உத்தரவிட்டனர்.

மேலும் அடுத்த விசாரணை ஏற்கனவே நிலுவையில் உள்ள பிரதான வழக்குடன் வரும் ஆகஸ்டு 6 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் அதற்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+