Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகூர் தர்கா நிர்வாகம் தொடர்பான வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகூர் தர்கா நிர்வாகம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது

நாகூர் தர்கா நிர்வாகம் முறைகேடு தொடர்பான வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி அக்பர் அடங்கிய தற்காலிக குழுவை நியமித்தது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சுமார் 4 மாதங்களுக்குத் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட இந்த குழு இன்னும் தொடர்வது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினர்

Madras high court directs waqf board to hand over nagore dargah administration

இதையடுத்து நாகூர் தர்கா நிர்வாகத்தைத் தொடர விரும்பவில்லை என்றும் நிர்வாகத்தை மீண்டும் வக்பு வாரியத்திடம் ஒப்படைப்பதாகவும் தற்காலிகக் குழு தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட ஒரு தரப்பு 1946 உயர்நீதிமன்றம் உத்தரவின்படி தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்களிடம் வழங்கலாம் என்று வாதிட்டனர்.

இதை ஏற்ற நீதிபதிகள், நாகூர் தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வக்பு வாரியத்துக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+