கோவை இருகூர் - கர்நாடகா இடையே பாரத் பெட்ரோலியம் பைப்லைன் திட்டம்.. தடை கோரிய மனு தள்ளுபடி!
சென்னை: கோவை மாவட்டம் இருகூர் - கர்நாடகாவின் தேவாங்கோதி இடையே பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொள்ளும் பைப் லைன் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் இருகூர் மற்றும் கர்நாடகாவின் தேவாங்கோதி இடையே பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பைப் லைன் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை இருகூரை சேர்ந்த விவசாயி கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கொச்சி - கோவை - கரூர் மார்க்கமாக பெட்ரோலியம் பைப் லைன் அமைக்கும் திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்திய போது உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் இருகூர் - தேவாங்கோதி பைப் லைன் திட்டத்தை அமல்படுத்தினால் தனது விவசாய நிலம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் கருத்துக்களை கேட்காமலும், சட்ட விதிமுறைகளை பின்பற்றாமலும் பார்த்துக் கொள்ளப்படும் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிடி ஆஷா, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications