கோவை இருகூர் - கர்நாடகா இடையே பாரத் பெட்ரோலியம் பைப்லைன் திட்டம்.. தடை கோரிய மனு தள்ளுபடி!
சென்னை: கோவை மாவட்டம் இருகூர் - கர்நாடகாவின் தேவாங்கோதி இடையே பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொள்ளும் பைப் லைன் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் இருகூர் மற்றும் கர்நாடகாவின் தேவாங்கோதி இடையே பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பைப் லைன் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை இருகூரை சேர்ந்த விவசாயி கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கொச்சி - கோவை - கரூர் மார்க்கமாக பெட்ரோலியம் பைப் லைன் அமைக்கும் திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்திய போது உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் இருகூர் - தேவாங்கோதி பைப் லைன் திட்டத்தை அமல்படுத்தினால் தனது விவசாய நிலம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் கருத்துக்களை கேட்காமலும், சட்ட விதிமுறைகளை பின்பற்றாமலும் பார்த்துக் கொள்ளப்படும் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிடி ஆஷா, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications