ராமதாஸ் தரப்புக்கு பெரிய அடி.. மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!
சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு ஏற்புடையது அல்ல என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம் வைத்தது.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டை நாடும்படி ராமதாசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டிலும் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கும்படி ராமதாஸ் தரப்பில் முறையிட்டனர். மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பிறகு அவசர வழக்காக விசாரிக்கும்படி விடுத்த கோரிக்கையையும் ஏற்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வரும் சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதால், மனு செல்லதக்கது அல்ல என வாதிடப்பட்டது.
அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டு அவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். தந்தைக்கு எதிராக செயல்படவில்ல" என விளக்கம் அளித்தார். பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தரப்பில் அளித்த விளக்கத்தில், "ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டாமல் தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டார்" என தெரிவிக்கப்பட்டது.
ராமதாஸ் தரப்பில், "ஏற்கனவே நிர்வாக குழு கூடி ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு பரிசீலனை செய்யப்படாததால் தான் வழக்கு தொடரப்பட்டது." எனக் கூறப்பட்டது.
அதன் பிறகு, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications