திமுகவின் வழக்கில் 200 வழக்கறிஞர்களுடன் வந்த அண்ணாமலை.. எழுந்த சிக்கல்.. ஹைகோர்டில் பரபரப்பு வழக்கு
சென்னை: திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்ற பணிகளை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் 200 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், பார் கவுன்சில் பதிலளிக்க கால அவகாசம் கோரியதால் வழக்கை ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் என்.மகேந்திரபாபு என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டி.எம்.கே. ஃபைல்ஸ் தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியதால், ஜூலை 14ஆம் தேதி அண்ணாமலை நேரில் ஆஜரானபோது, நீதிமன்ற அறையில் அவரது சார்பில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற அறை மட்டுமல்லாமல் வளாகம் முழுவதும் பாஜக வழக்கறிஞர்களா நிரம்பி வழிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நீதிமன்ற பணிகள், நீதிபதியின் பணி ஆகியவை பாதிக்கப்படுவதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறி, கடந்த காலங்களில் உயர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும், எழும்பூர் நீதிமன்றத்தில் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலும் ஆஜரானபோது கூட்டம் குழுமியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இதுபோன்று விஐபி-கள் மற்றும் விவிஐபி-கள் ஆஜராகும் வழக்குகளில், அவர்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், தமிழக அரசு மற்றும் தமிழக டிஜிபி ஆகியோருக்கு ஜூலை 17ஆம் தேதி கோரிக்கை மனு அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
தான் அனுப்பிய அந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது தமிழ்நாடு மற்றும் புதுவை பார்கவுன்சில் சார்பாக வழக்கறிஞர் சந்திரசேகர் ஆஜராகி இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார் அதை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 11-ம் தேதி அன்று தள்ளிவைத்தனர்.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிகமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications