Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸை போலீசாரால் தடுக்க முடியவில்லை.. வன்முறைக்கு காரணம் என்ன? நீதிமன்றத்தில் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகி செய்யப்பட்டார். இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அதிமுக அலுவலகத்தை ஓ பன்னீர்செல்வம் கைப்பற்றியதோடு, சில முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

Madras High Court has directed the police to file a report regarding the violence at the AIADMK headquarters.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த இரு வழக்குகளும் நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

இதனைத்தொடர்ந்து இபிஎஸ் தரப்பு வாதம் முடிவடைந்த பின், ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ் வாதிட்டார். அதில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் என்ன நடந்தது என்பது எப்படி தெரியும்? தகவல் ஆதாரத்தைக் கூறாமல் அவர் எப்படி குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அதிமுகவின் பொருளாளராக இருந்தவர். அவர் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு செல்ல அப்போது எந்தத் தடையும் இல்லை என்று வாதிட்டார். தொடர்ந்து, ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல எந்த தடையும் அப்போது இல்லை. ஆனால் சூழலை கருத்தில் கொண்டு அவர் அதிமுக தலைமை அலுவலகம் செல்வதை தவிர்த்திருக்கலாம் என்று நீதிபதிகள் கருத்து கூறினர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறை தரப்பில், அதிமுக அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 8.30 மணியளவில் ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வந்தபோது, அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அவர் நான் பொருளாளர். அதனால் எனக்கு கட்சி அலுவலகம் செல்ல உரிமை உள்ளது என்று கூறி, கட்சி அலுவலகம் சென்றார். இதனைத்தொடர்ந்து அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் தலையிட்டதால் மட்டுமே உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக நாளை வீடியோ ஆதாரங்கள் மற்றும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+