அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்கு.. ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!
சென்னை: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலின் போது அனுமதியின்றி கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 5 ஆண்டுகளாகியும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா பரவலின் போதும் கூட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டு திமுக சார்பாக விருதுநகரில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா பரவலின் போது திமுக தரப்பில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பின் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 5 ஆண்டுகளாகியும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த வழக்கை என்ற கோரிக்கையுடன் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தரப்பில் மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்த வழக்கில் 2 ஆண்டுகள் வரையில் மட்டுமே தண்டனை அளிக்கும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியான சூழலில் 5 ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேபோல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கொரோனா காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விருதுநகர் தொகுதி திமுக எம்எல்ஏ ஏஆர்ஆர் சீனிவாசனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications