Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொந்தக் கட்சியினரை கூட கட்டுப்படுத்த தெரியாதா? தவெக மாவட்டச் செயலாளரை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. விஜய்யின் நாமக்கல் பிரச்சாரத்தின் போது தனியார் மருத்துவமனை தாக்கப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், சொந்தக் கட்சியினரை கூட கட்டுப்படுத்த தெரியாதா என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

Madras High Court has refused to grant anticipatory bail to TVK District Secretary Satish Kumar

இதனால் முன்னெச்சரிக்கையாக முன் ஜாமீன் கேட்டு சதீஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நான் எந்த குற்றமும் செய்யவில்லை. அரசியல் காரணங்களுக்காக வழக்கில் என்னையும் சேர்த்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த ஒரே காரணத்திற்காக எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி செந்தில் குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், தவெகவினரின் செயல்பாடுகள் காரணமாக ரூ.5 லட்சம் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக 8 வழக்குகள் சதீஷ் குமாருக்கு எதிராக பதிவாகி இருக்கிறது என்று கூறியதோடு, அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் தாக்கல் செய்தனர். இதன்பின் நீதிபதி செந்தில் குமார், கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போது, எதுவும் தெரியாது என்று மனுதாரர் எப்படி கூறலாம்?

சொந்தக் கட்சியினரைக் கூட கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியதோடு, முன் ஜாமீன் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தனர். இதனால் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+