2 வாரம் டைம்.. ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் கேட்டவருக்கு வழங்கனும்: ஹைகோர்ட்
சென்னை : ஜாதி - மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு இரண்டு வாரங்களில் சான்று வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேற்கு அண்ணா நகரை சேர்ந்த மனோஜ், தனது மகன் யுவன் மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்க உள்ளதால், ஜாதி - மதம் இல்லை என்ற சான்றிதழ் கோரி அம்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளார்.

சான்றிதழ் வழங்கப்படாததால், மகனுக்கு ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு வந்தபோது, சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டதாக தாசில்தாரர் அளித்த கடிதத்தை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், இரண்டு வாரங்களில் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். தமிழகத்தில் ஏற்கனவே பலர் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி மதம் இல்லை என சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications