சாம்சங் இந்தியா தொழிற்சங்க பதிவு.. 6 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சாம்சங் தொழிற்சாலையில், தொழிற்சங்கம் அமைக்க சிஐடியு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில் சங்கம் அமைப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தொழிற்சாலைகளில் சங்கம் அமைப்பது என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். ஆனால், தொழிற்சாலை நிர்வாகங்கள் சங்கம் அமைப்பதை விரும்புவதில்லை. ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையிலும் இதே பிரச்னைதான். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், 8 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை வாங்கப்படுகிறது என்றும், ஆனால் அதற்கான முறையான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சிஐடியு தலைமையில் 'சாம்சங் இந்தியா' என்கிற பெயரில் தொழிற்சங்கத்தை உருவாக்கினர். இந்த சங்கத்தை பதிவு செய்ய கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்துள்ளனர். பொதுவாக இப்படி வரும் விண்ணப்பங்கள் குறித்து ஒரு சில நாட்களில் முடிவெடுக்கப்பட வேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால், சாம்சங் இந்தியா விஷயத்தில் தொழிலாளர் நல ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இது குறித்து சிஐடியு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மறுபுறம் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தலைமையில் திடீரென தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் தொழிற்சங்கம் எதுவும் வேண்டாம் என்று தொழிலாளர்கள் கூறிவிட்டதாக செய்திகள் பரவின. இதற்கு சிஐடியு மறுப்பு தெரிவித்திருந்தது. பெரும்பாலான தொழிளாலர்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவும், எனவே தொழிற்சங்கத்தை அமைத்தே தீர வேண்டும் எனவும் சிஐடியு வலியுறுத்தியிருந்தது.
இப்படி இருக்கையில் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது. சாம்சங் என்கிற பெயரை பயன்படுத்துவதை நிர்வாகம் விரும்பவில்லை. எனவேதான் தொழிற்சங்க பதிவை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று தொழிலாளர் நல ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த சங்கத்தை பதிவு செய்ய கோரிய மனு மீது 6 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நல பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே விரைவில் சங்கம் பதிவாகிடும் என்று சிஐடியு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications