8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்.. 10 ஆண்டு கடுங்காவல்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே சமயத்தில், குற்றவாளியின் குழந்தைகள் படிப்பை தொடர உரிய உதவியை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறும் தமிழக அரசை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருப்பூர் மாவட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே, இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்த நபரை கைது செய்தனர். இதனிடையே, இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர் சிறுமியை பலாத்காரம் செய்ததற்கு உரிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அந்த நபரை கடந்த 2014-ம் ஆண்டு விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அரசு சார்பில் வழக்கறிஞர் கிஷோர் குமார் ஆஜராகி வாதிட்டார் இந்நிலையில், இந்த வழக்கானது, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர, குற்றவாளியின் குடும்பப் பின்னணி மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டும், குழந்தைகள் கல்வியை தொடர்வதற்கும், வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கும் அரசு உதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படியும் சமூக நலத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications