'தல' 'தலை' தப்பாது போலயே..செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விசாரிக்க ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்குகளை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தற்போது ஆளும் திமுகவில் மின்துறை அமைச்சராக இருக்கிறார் செந்தில் பாலாஜி. முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராகவும் செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைசராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தார் செந்தில் பாலாஜி என்பது வழக்கு. செந்தில் பாலாஜியுடன் அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. தம் மீதான மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு தாக்கல் செய்தார். இன்னொரு பக்கம், பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் மேலும் சிலர் புதியதாகவும் மனுத் தாக்கல் செய்தனர். அதேபோல் அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது.
செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முன்னர் ரத்து செய்திருந்தது. பின்னர் உச்சநீதிமன்றம் இந்த ரத்து உத்தரவுக்கு தடை விதித்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது. ஆகையால் மூன்று வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரம் மிக்க நபராக இருக்கிறார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உரிய அறிவுறுத்தல்களை ஏற்கனவே வழங்கி இருக்கிறது. இதனடிப்படையில் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்யக் கூடாது என்றார். செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் கொடுத்த மனுதாரர்களும் அவர் மீதான வழக்குகளை ரத்து செய்தால் அவரிடம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்காது. ஆகையால் வழக்குகளை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டனர். தமிழக போலீசார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திலக், இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவஞானம், இந்த வழக்கில் அக்டோபர் 31 திங்கள்கிழமையன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறியிருந்தார். இதனையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி சிவஞானம்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications