ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என ஹைகோர்ட் தீர்ப்பு- லோக்சபாவில் அதிமுகவுக்கு இனி எம்பி கூட இல்லை?
சென்னை: தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பளித்துள்ளது. இதனால் லோக்சபாவில் அதிமுகவுக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலைமை உருவாகி இருக்கிறது. இருப்பினும் ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்வதற்காக இத்தீர்ப்பை 30 நாட்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். ஆனால் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரம் உள்ளிட்ட உண்மை தகவல்களை மறைத்தது போன்றவற்றை சுட்டிக் காட்டி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி வழக்கறிஞர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பளித்தது.

அதேநேரத்தில் ரவீந்திரநாத் தரப்பு மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் அளித்து இத்தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் லோக்சபாவில் அதிமுகவுக்கு இனி ஒரு எம்பி கூட இல்லை என்கிற நிலைமை உருவாகி உள்ளது. அதிமுக வரலாற்றில் 1996-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அக்கட்சி ஒரு இடம் கூட வெல்லவில்லை. அப்போதைய லோக்சபாவில் அதிமுகவுக்கு ஒரு எம்பி கூட இல்லை. அதேபோல 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 33 இடங்களில் போட்டியிட்ட அதிமுக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் லோக்சபாவில் ஒற்றை எம்பியாக ரவீந்திரநாத் இருந்து வந்தார். தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஒரு எம்பி பதவியையும் அதிமுக இழக்கும் நிலைமை உருவாகி உள்ளது.
ஆனாலும் அதிமுகவுக்கு ஆறுதலாக, ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
-
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications