ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை அறிய சென்னை ஐஐடி கண்டுபிடித்த சூப்பர் கருவி
சென்னை : பல்வேறு நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு, ரத்த நாளத்தின் ஆரோக்கிய தன்மையை, ஆரம்ப நிலையிலேயே மதிப்பிடுவதற்காகவும், இதய நோய்களின் முன்னெச்சரிக்கை மதிப்பீடுகளை பெறுவதற்கும் ஆர்ட்சென்ஸ் என்ற புதிய பரிசோதனைக் கருவியை சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள 'ஆர்ட்சென்ஸ்' கருவி மூலம் நமது ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை அறிய முடியும். அத்துடன் வயதை மதிப்பீடு செய்வதற்கும் உதவும். இதன் மூலம் இதய நோய்களுக்கான ஆரம்பக்கட்ட பரிசோதனையை வழங்க முடியும். இந்த கருவி உடல் செல்-நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதில் என்ன விஷேசம் என்றால், இந்த கருவியை பயன்படுத்த நிபுணர்களாக இருக்க வேண்டியது இல்லை. இந்த கருவில் மூலம் நிபுணர்களாக இல்லாவிட்டாலும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ரத்த நாள ஆரோக்கியத்தை மதிப்பிட முடியும். அத்துடுன் என்ன என்பதை கணித்து பன்படுத்த முடியுமாம்.
இதற்காக 'இமேஜிங்' அல்லாத கணினி தளம் மூலம் இயக்கப்படும் தொழில்நுட்பத்தை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். இதுவரை இந்த கருவியைக்கொண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பரிசோதனை செய்து மதிப்பீடு செய்திருக்கிறார்கள். ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான ரத்த நாள சோதனை நடத்துவதற்கு இதனை பயன்படுத்தவேண்டும் என சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் விரும்புகிறார்களாம்.
இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை முக்கியம். எனவே அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவில் 5 பயன்பாட்டு காப்புரிமைகளை இத்தொழில்நுட்பம் பெற்றுள்ளது., 10 வடிவமைப்பு காப்புரிமைகளுடன், 28 காப்புரிமைகளை பெறுவதற்காக வெவ்வேறு அதிகார வரம்புகளில் காத்திருக்கிறதாம். விரிவான சோதனைக்குப்பிறகு தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வணிகப்படுத்துதலுக்கு இந்தக்கருவி தயாராகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபற்றி சென்னை ஐ.ஐ.டி., மின் பொறியியல் துறை உதவி பேராசிரியர், டாக்டர் ஜெயராஜ் ஜோசப் கூறும் போது, இதயம், ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் தான் உலகம் முழுதும் இறப்புக்கான முக்கிய காரணங்களாக உள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே, இதயம், ரத்த நாளங்களில் உள்ள கோளாறை கண்டறிந்து, சரி செய்வது அவசியம். அப்படி கண்டுபிடிக்க உருவாக்கப்பட்ட கருவி தான் ஆர்ட்சென்ஸ் கருவி. இந்த கருவி மூலம்
நோய் மற்றும் முதுமை காரணமாக, ரத்தநாளங்களின் சுவரில் ஏற்படும் மாற்றங்களின் விளைவை துல்லியமாக அளவிட முடியும். அதனால், தேவையான மருத்துவ சிகிச்சைகளை, தேவையான நேரத்தில் மேற்கொள்ளலாம். இந்த கருவி குறித்த கூடுதல் விபரங்களை, http://artsens.tech/ என்ற இணையதளத்தில் அறியலாம்.
ஆர்ட்சென்ஸ் கருவியின் ஒரேயொரு சோதனையால், பல்வேறு நோய் பாதிப்பு ஆளானவர்களுக்கு, ரத்த நாளத்தின் ஆரோக்கிய தன்மையை, ஆரம்ப நிலையிலேயே மதிப்பிடலாம் முடியும் என்றும் இதய நாள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளவர்களுக்கு, பாரம்பரிய இதயநாள ஆபத்து அறிகுறிகள் ஏற்படும்போதே, இந்த கருவியால் சோதித்து கண்காணிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications