Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை அறிய சென்னை ஐஐடி கண்டுபிடித்த சூப்பர் கருவி

Subscribe to Oneindia Tamil

சென்னை : பல்வேறு நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு, ரத்த நாளத்தின் ஆரோக்கிய தன்மையை, ஆரம்ப நிலையிலேயே மதிப்பிடுவதற்காகவும், இதய நோய்களின் முன்னெச்சரிக்கை மதிப்பீடுகளை பெறுவதற்கும் ஆர்ட்சென்ஸ் என்ற புதிய பரிசோதனைக் கருவியை சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள 'ஆர்ட்சென்ஸ்' கருவி மூலம் நமது ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை அறிய முடியும். அத்துடன் வயதை மதிப்பீடு செய்வதற்கும் உதவும். இதன் மூலம் இதய நோய்களுக்கான ஆரம்பக்கட்ட பரிசோதனையை வழங்க முடியும். இந்த கருவி உடல் செல்-நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Madras IIT Researchers have found ARTSENS Plus, this divice very good for checking blood pressure

இதில் என்ன விஷேசம் என்றால், இந்த கருவியை பயன்படுத்த நிபுணர்களாக இருக்க வேண்டியது இல்லை. இந்த கருவில் மூலம் நிபுணர்களாக இல்லாவிட்டாலும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ரத்த நாள ஆரோக்கியத்தை மதிப்பிட முடியும். அத்துடுன் என்ன என்பதை கணித்து பன்படுத்த முடியுமாம்.

இதற்காக 'இமேஜிங்' அல்லாத கணினி தளம் மூலம் இயக்கப்படும் தொழில்நுட்பத்தை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். இதுவரை இந்த கருவியைக்கொண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பரிசோதனை செய்து மதிப்பீடு செய்திருக்கிறார்கள். ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான ரத்த நாள சோதனை நடத்துவதற்கு இதனை பயன்படுத்தவேண்டும் என சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் விரும்புகிறார்களாம்.

இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை முக்கியம். எனவே அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவில் 5 பயன்பாட்டு காப்புரிமைகளை இத்தொழில்நுட்பம் பெற்றுள்ளது., 10 வடிவமைப்பு காப்புரிமைகளுடன், 28 காப்புரிமைகளை பெறுவதற்காக வெவ்வேறு அதிகார வரம்புகளில் காத்திருக்கிறதாம். விரிவான சோதனைக்குப்பிறகு தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வணிகப்படுத்துதலுக்கு இந்தக்கருவி தயாராகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Madras IIT Researchers have found ARTSENS Plus, this divice very good for checking blood pressure

இதுபற்றி சென்னை ஐ.ஐ.டி., மின் பொறியியல் துறை உதவி பேராசிரியர், டாக்டர் ஜெயராஜ் ஜோசப் கூறும் போது, இதயம், ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் தான் உலகம் முழுதும் இறப்புக்கான முக்கிய காரணங்களாக உள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே, இதயம், ரத்த நாளங்களில் உள்ள கோளாறை கண்டறிந்து, சரி செய்வது அவசியம். அப்படி கண்டுபிடிக்க உருவாக்கப்பட்ட கருவி தான் ஆர்ட்சென்ஸ் கருவி. இந்த கருவி மூலம்
நோய் மற்றும் முதுமை காரணமாக, ரத்தநாளங்களின் சுவரில் ஏற்படும் மாற்றங்களின் விளைவை துல்லியமாக அளவிட முடியும். அதனால், தேவையான மருத்துவ சிகிச்சைகளை, தேவையான நேரத்தில் மேற்கொள்ளலாம். இந்த கருவி குறித்த கூடுதல் விபரங்களை, http://artsens.tech/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

ஆர்ட்சென்ஸ் கருவியின் ஒரேயொரு சோதனையால், பல்வேறு நோய் பாதிப்பு ஆளானவர்களுக்கு, ரத்த நாளத்தின் ஆரோக்கிய தன்மையை, ஆரம்ப நிலையிலேயே மதிப்பிடலாம் முடியும் என்றும் இதய நாள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளவர்களுக்கு, பாரம்பரிய இதயநாள ஆபத்து அறிகுறிகள் ஏற்படும்போதே, இந்த கருவியால் சோதித்து கண்காணிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+