Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை கமிஷனர் ஆபீசுக்குள்ளே திடீர்னு நுழைந்த "நகைக்கடை".. மதுரை வரிச்சியூர் செல்வம் திருந்திட்டாராமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கமிஷனர் ஆபீசுக்குள் திடீரென உள்ளே நுழைந்தார் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம்.. ஏன் தெரியுமா? என்ன நடந்தது தெரியுமா?

மதுரையை சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம்.. வரிச்சியூர் என்பது அங்குள்ள ஒரு ஊர்.. பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் செல்வம்.. முன்னாள் திமுக நிர்வாகியும்கூட.

Madurai famous rowdy Varichiyur Selvam and why did varichiyur selvam come to Chennai Commissioner Office

வரிச்சியூர் செல்வம்: இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இப்போது ஏகப்பட்ட பிசினஸ்களை செய்து வருகிறார். இவரது உடம்பெல்லாம் தங்க நகை மின்னும்.. இதுதான் செல்வத்தின் டிரேட் மார்க்..

அதேபோல் எப்போதுமே காஸ்ட்லி கார்களில் ரவுண்டு அடிப்பார்.. சொகுசு மற்றும் ஆடம்பர விடுதிகளுக்கு போய் வருவார்.. அதனாலேயே இவரை பற்றின செய்திகள் அடிக்கடி சோஷியல் மீடியாவில் வலம்வலம் வந்து கொண்டே இருக்கும். விஐபி தரிசனத்தில் உள்ளே சென்று இவர், அத்திவரதரை கும்பிட்டதுகூட சர்ச்சையானது..

பகீர் விளக்கம்: அதற்கு இவர் விளக்கம் சொல்லும்போது, "இவ்ளோ பெரிய பிரச்சனை வரும்னு எனக்கு தெரியாது. நான் வெச்சிருக்கிற கார் 1 கோடி ரூபாய்.. நான் ஒரு லேன்ட் ஓனர்.. என்கிட்ட 7 கார்கள் இருக்கு.

நான் விவிஐபி இல்லையா? நான் போட்டிருக்கிற நகை மொத்தம் 250 பவுன். இது போக, பைனான்ஸ் தனியா பண்றேன். வாரத்துல 3 நாள் வெளியூர், மீதி 4 நாள் சாயங்காலத்துல பேரன், பேத்திகளுடன் வாக்கிங் போவேன், ஷாப்பிங் காம்பிளக்ஸ் போவேன். சாப்பிடுவேன். எனக்கு ரோல் மாடல் யாருன்னு பார்த்தீங்கன்னா, இப்போ லண்டன்ல இருக்கார் இல்லே... ரூ.9 ஆயிரம் கோடி ஏமாத்திட்டு, அவர்தான் என் குருநாதர்.. அவர் இப்படித்தாங்க வாழ்றாரு" என்று கூறி மக்களை அதிர வைத்தவர் இந்த வரிச்சியூர் செல்வம்.

அதிரடி கைது: போலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் பலமுறை ஜெயிலுக்கு போயிருக்கிறார் ரவுடி வரிச்சியூர் செல்வம்.. கடந்த 2021-ம் ஆண்டு சென்னையில் தன்னுடைய கூட்டாளியை சுட்டுக்கொன்றதுடன், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி தாமிரபரணியில் வீசிய வழக்கில், வரிச்சியூர் செல்வத்தை கடந்த ஜூன் மாதம் விருதுநகர் போலீஸார் கைது செய்தார்கள்.. சிறையிலும் அடைத்தார்கள்.

சமீபத்தில்தான், ஜாமீனில் வெளியே வந்தார் ரவுடி வரிச்சியூர் செல்வம்.. சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் ஆபீசுக்கு நேற்று திடீரென வந்தார்.

பரபரப்பு: அங்கு தன்னை கைது செய்த வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க்கை சந்தித்து, ரவுடியிசத்தை கை விட்டு திருந்தி வாழ போவதாக சொன்னார்.. இனிமேல் எந்த தவறும் செய்யமாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளாராம். ரவுடி வரிச்சியூர் செல்வம் திடீரென கமிஷனர் ஆபீசுக்கு வந்ததால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+