சீமான் தலைமையிலான வேல் நடைபயணத்திற்கு அனுமதி கிடையாது.. மதுரை ஹைகோர்ட் அதிரடி
சீமானின் வேல் நடைபயணத்திற்கு கோர்ட் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
சென்னை: சீமான் நாளைக்கு பழனியில் வேல் நடைபயணம் செல்ல திட்டமிட்டிருந்தார்.. ஆனால் அதற்கு அனுமதி கிடையாது என்று மதுரை ஹைகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
"தமிழர் நிலத்தின் கடவுள்" என்று முருகனை கொண்டாடி வருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.. இது சம்பந்தமாக இவர் தந்த விளக்க வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பெரும் வைரலாகிய காலகட்டம் ஒன்று உண்டு!
இந்நிலையில் தற்போது பாஜக வேல் யாத்திரையை மேற்கொண்டு வருகிறது.. இந்த யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் போலவே சீமானும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அரசியல்
"இந்த பாஜகவுக்கு என்ன தெரியும்.. அவங்களுக்கு அரசியல் செய்வதற்கு ஒன்னும் இல்லை.. தெரிந்ததெல்லாம் மதம், மாடு, சாணி, பாகிஸ்தான் இதுதான்.. அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் செய்ததுபோல, கேரளாவில் ஐயப்பனை வைத்து அரசியல் செய்யலாம் என்று முயற்சி பண்ணினாங்க.. தோத்து போய்ட்டாங்க.. இப்போ தமிழ்நாட்டில் முருகனைக் கையிலெடுக்கிறார்கள்.

சீமான் முகம்
இத்தனை வருஷமா முருகனை தொடாமல், இப்போ ஏன் கையிலெடுக்கிறார்கள் தெரியுமா... எனக்கு பயந்துதான். இவங்க என்னதான் வேல் எடுத்து "அரோகரா" போட்டாலும், "வெற்றி வேல், வீர வேல்" என்று கத்தினாலும், "முருகா" என்று சொன்னாலே இந்த சீமான் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்" என்று கூறியிருந்தார்.

அனுமதி
அதுமட்டுமல்ல, "நான் அன்னைக்கு யாத்திரை போனேனே.. எனக்கு யாராவது அனுமதி தந்தாங்களா? என்னை 100 அடியாவது நடக்க விட்டீங்களா.. இப்போ பாஜகவை மட்டும் ஏன் அனுமதிக்கணும்" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

நடைபயணம்
இந்நிலையில், சீமான் தலைமையில் பழனியில் நாளை வேல் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.. ஆனால், இந்த வேல் நடைபயணத்திற்கு, பழனி எஸ்பி அலுவலகம் அனுமதி மறுத்தது. இதனால் இதை எதிர்த்து கஜா என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் உரிய கட்டுப்பாட்டுடன் வேல் நடைபயணத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஒத்திவைப்பு
ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளதால் நடைபயணத்துக்கு அனுமதி தர முடியாது என்று திண்டுக்கல் மாவட்ட எஸ்பி தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நாம் தமிழர் கட்சியின் வேல் நடைபயணத்திற்கு அனுமதி வழங்கமுடியாது என உறுதியாக தெரிவித்துவிட்டதுடன், இந்த வழக்கை ஜனவரி மாதத்திற்கும் ஒத்திவைத்தார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications