டிரம்ப் வரி விதிப்பால் சிறு, குறு தொழில்களுக்கு பெரிய அடி.. நிதி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்
சென்னை: அமெரிக்க வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு வாராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், "அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரியின் காரணமாக பல சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையான இண்ணல்களுக்கு ஆளாகியுள்ளன. இதன் விளைவாக வங்கி கடன்களை செலுத்த முடியாமல் அவை வாராக்கடன்களாக மாறும் அபாயம் உள்ளதாக தொழில் முனைவோர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மீது கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 45 சதவிகிதம் வரையிலும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வாயிலாகவே நடந்து வருகின்றன.
ஜவுளி, கடல் உணவு, ஆபரணங்கள் ஆகிய துறைகள் அமெரிக்காவுக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 25 சதவிகித பங்கை கொண்டுள்ளன. இந்த வரி விதிப்பால் இவை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த துறைகளில் குரு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு 70% இருக்கும் அதிக பங்கு உள்ளது. ரசாயன துறையும் கடும் பாதிப்பை எதிர்கொள்கிறது. அந்த துறையின் ஏற்றுமதியில் குறு - சிறு நடுத்தர தொழில்களுக்கு 40 சதவீதம் பங்கு உண்டு.
தமிழ்நாட்டில் இதன் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது. ஏனெனில் இது ஜவுளித்துறை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் மாநிலம் ஆகும். இவற்றில் பெரும்பாலான அலகுகள் குரு சிறு நடுத்தர தொழில்களை சேர்ந்தவையே வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் அறிவுறுத்தலின்படி விநியோகங்கள் ஒத்திவைக்கப்பட்டதால் திடீரென கையிருப்புகள் அதிகமாக தேக்கமடைந்து வருகின்றன. நூல் நூர்ப்பு முதல் உடை தயாரிப்பு வரை உள்ள முழு உற்பத்தி சங்கிலியும் இந்த வரிப் போரின் காரணமாக கடந்த மாதத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்திலேயே மாற்று ஏற்றுமதி சந்தைகளை பெறுவது மிகவும் சிரமமானதாக இருக்கிறது. இந்த நிலையில் குறு சிறு நடுத்தர தொழில்கள் வங்கிகளின் கடன் பொறுப்புகளை நிறைவேற்றுவதை கடினமாக்கி கடன் செலுத்த தவறும் கடன்களை வாரா கடன் வகைக்கு தள்ளக் கூடும் இதன் விளைவாக நிறுவனங்களில் எதிர்கால கடன் பெரும் தகுதியும் பாதிக்கப்படும்.
இந்தச் சூழலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோருகிறேன். இந்திய ரிசர்வ் வாங்கிய இடம் விதிமுறைகளை தளர்த்தவும் இந்த நெருக்கடியின் போது குறு சிறு நடுத்தர தொழில்களின் கடன் கணக்கை வாரா கடன்களாக வகைப்படுத்தாமல் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகிறேன். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு மேற்கண்ட இறக்குமதி வரி உயர்வு பிரச்சனையில் சாதகமான தீர்வு கிடைக்கும் வரை இந்த நிவாரணம் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications