இது ஒன்றும் கைச்சரக்கல்ல..தேசத்தின் பொக்கிஷம்..பிரசார் பாரதிக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம்!

பிரச்சார பாரதிக்கு எம்பி வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு முடிவெடுத்துள்ளது... பணத்தேவைக்காக விற்க வரலாறு கைசரக்கல்ல.. தேசத்தின் பொக்கிஷம்... ஏலம் விடும் முடிவு கைவிடப்பட வேண்டும்" என்று மத்திய அரசை எம்பி சு.வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியிருக்கிறார்.. அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:

Madurai MP Su Venkatesan writes letter to Central Minister about Prachar Bharathis decision

"வரலாற்று ஆவணங்களை விற்பது தேசதுரோகம்.. பிரசார் பாரதி அமைப்பின் முடிவை கைவிடுமாறு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்களுக்கு நான் எழுதியிள்ள கடிதத்தின் விபரம் வருமாறு.

தன்னிடம் உள்ள வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு (அக்:8) முடிவெடுத்துள்ளது. இவர்கள் ஏலம் விடப் போகிற ஆவணங்களில் அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் உள்ளிட்ட இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் அடங்கும். நிகழ்கால அரசியல் தேவைகளுக்காக வரலாற்றினை சிதைக்க முயலும் எந்த ஒரு முயற்சியையும் அனுமதிக்க முடியாது.

Madurai MP Su Venkatesan writes letter to Central Minister about Prachar Bharathis decision

இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது தேசத்தின் அரசியலை, அமைதியை, சமாதானத்தை எதிர்மறையாக பாதிக்க கூடும். ஆகவே கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது. இந்த சேமிப்பு ஆவணங்களுக்கு
சந்தையில் நல்ல விலையும், தேவையும் இருப்பதால் அதை "பணமாக்க" போவதாக பிரசார் பாரதி அறிவித்துள்ளது.

இப்படித் தரப்படும் உரிமைகளில் "தனி உரிமைகளும்" (Exclusive rights) அடக்கம். இது அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கான பணம் பண்ணும் பிரச்சினை அல்ல. சமூகத்தின் மீது நீண்ட கால விளைவுகளை உருவாக்குகிற பிரச்சினை. கண்களில் படுவதையெல்லாம் விற்க முனையக் கூடாது. கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்பட வேண்டியது வரலாறு. ஆகவே பிரசார் பாரதியின் முடிவை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகிறேன்" என்று அந்த கடிதத்தில் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை தன்னுடைய ட்விட்டரிலும் வெங்கடேசன் பதிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+