சென்னை வண்ணாரப்பேட்டையில் உறவினரின் காரை ஓட்டிய சிறுவன்.. 20 பைக்குகள், ஷேர் ஆட்டோ மீது மோதி விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் 20 பைக்குகள், ஷேர் ஆட்டோ மீது சிறுவன் ஒருவர் காரை மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் சென்னைக்கு உறவினர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர்களுக்கு தெரியாமல் காரை எடுத்து வந்தார்.

அப்போது காரை கட்டுப்படுத்த தெரியாமல் சாலையில் வந்த 20 பைக்குகள் மீது மோதினார். அப்படியும் கார் நிற்காமல் தறிகெட்டு ஓடி ஷேர் ஆட்டோ மீது மோதியது.
பின்னர் கார் நிற்காமல் மரத்தில் மோதி நின்றது. இதையடுத்து பொதுமக்கள் அந்த மாணவரை பிடித்தனர்.












Click it and Unblock the Notifications