மதுரையில் வாக்குப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்.. தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை: மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அனுமதியின்றி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலின் இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் உள்ள 38 எட்டு தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

மதுரையில் பதிவான வாக்குகள், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறைகளில் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவம் மற்றும் காவல் துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பு இந்த அறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவில், பெண் தாசில்தார் சம்பூர்ணம் அந்த அறைக்குள் நுழைந்து, சுமார் இரண்டு மணி நேரம், இருந்ததாகவும் அதன் பிறகு சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையொட்டி, எதிர்க் கட்சி வேட்பாளர்கள், நேற்று நள்ளிரவு வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு எதிரே தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்கள் கோரிக்கையை ஏற்று, அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போட்டு பார்த்ததில், தாசில்தார் சம்பூரணம் சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் இருந்தது உறுதியானது.
வெளியே செல்லும்போது சில ஆவணங்களை சம்பூரணம், கையில் எடுத்துச் சென்றதாகவும், காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் தாசில்தார் சம்பூரணம் சஸ்பெண்ட் செய்யப் படுவதாக சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகாரி அத்துமீறி நுழைந்தது பற்றி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications