மதுரையில் வாக்குப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்.. தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை: மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அனுமதியின்றி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலின் இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் உள்ள 38 எட்டு தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

மதுரையில் பதிவான வாக்குகள், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறைகளில் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவம் மற்றும் காவல் துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பு இந்த அறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவில், பெண் தாசில்தார் சம்பூர்ணம் அந்த அறைக்குள் நுழைந்து, சுமார் இரண்டு மணி நேரம், இருந்ததாகவும் அதன் பிறகு சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையொட்டி, எதிர்க் கட்சி வேட்பாளர்கள், நேற்று நள்ளிரவு வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு எதிரே தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்கள் கோரிக்கையை ஏற்று, அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போட்டு பார்த்ததில், தாசில்தார் சம்பூரணம் சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் இருந்தது உறுதியானது.
வெளியே செல்லும்போது சில ஆவணங்களை சம்பூரணம், கையில் எடுத்துச் சென்றதாகவும், காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் தாசில்தார் சம்பூரணம் சஸ்பெண்ட் செய்யப் படுவதாக சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகாரி அத்துமீறி நுழைந்தது பற்றி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications