Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Magalir urimai thogai 5000: வெள்ளிக்கிழமை மங்கலம் பொங்க..அக்கவுண்டுக்கு வந்த 5000! ஆதிதிராவிடர் நிதியில் கைவைத்ததா அரசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான விவகாரம் அரசியல் விவாதமாக மாறி, சமூக வலைத்தளங்களில் கடும் கருத்து மோதலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்தத் திட்டத்திற்கான நிதி ஆதிதிராவிடர் நல நிதியில் இருந்து மாற்றி ஒதுக்கப்படுகிறதா என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்டு அதிமுக மற்றும் திமுக ஆதரவாளர்கள் இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல் அதிகரித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக காலைப் பொழுதில் தமிழக பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை அடுத்து திமுக கூட்டணி கட்சிகள் வரவேற்பும் அதிமுக கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றன.

ஆனால் உண்மையில் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பு இல்லத்தரசிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதுவும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி அதிமுகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் இந்த 5000 ரூபாய் எதிர்பாராத பரிசு தொகையை அனைவருமே வரவேற்று இருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்..

Magalir urimai thogai mk stalin Tamil Nadu Assembly Election 2026

மகளிர் உரிமை தொகை

இது ஒருபுறம் இருக்க, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சமீபத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் விமர்சனங்கள் எழுந்தன. இதன் பின்னணியில், ஆதிதிராவிடர் சமூக நலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இந்தத் தொகை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதால் அரசியல் சூழல் மேலும் பரபரப்பாகியது.

ஆதிதிராவிடர் நிதி

அந்த பதிவில், பட்டியல் சமூக மக்களுக்கான நல நிதியை மாற்றி தேர்தல் நோக்கில் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் மறுப்பு தெரிவித்துள்ளனர். அரசின் நலத்திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். இந்த விவகாரம் புதிதாக உருவான ஒன்றல்ல என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

மகளிர் உரிமைத் தொகை திட்டம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்தே இதேபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2023ஆம் ஆண்டிலேயே தமிழக அரசு இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்திருந்தது. அந்த விளக்கத்தில், ஆதிதிராவிடர் துணைத் திட்ட நிதி வேறு திட்டங்களுக்கு மாற்றி பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என அரசு மறுத்திருந்தது.

திமுக அதிமுக விவாதம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் சமூக பாதுகாப்பு நோக்கில் செயல்படுத்தப்படும் நலத்திட்டமாகும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடு அரசின் வழக்கமான பட்ஜெட் நடைமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிப்பவை அல்ல என்றும் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தல்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நலத்திட்டங்கள் அரசியல் விவாதத்தின் மையமாக மாறியுள்ளன. இதன் ஒரு பகுதியாக மகளிர் உரிமைத் தொகை திட்டம் மீதான ஆதரவும் எதிர்ப்பும் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டு முன்வைக்கும் நிலையில், அரசு வழங்கிய விளக்கமே இறுதியான அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என கூறப்படுகிறது. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் இந்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+