மகா சிவராத்திரி விழா.. சென்னை கோயில்களில் கோலாகலமாக கொண்டாட்டம்
சென்னை: மகா சிவராத்திரியையொட்டி, சென்னை கோயில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்பானது. அன்றைய தினம் சிவன் கோயில்களில் 4 கால பூஜைகள் செய்வது வழக்கம். அந்த வகையில் சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், பாரியில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயில், திருமங்கலத்தில் உள்ள திருவல்லீஸ்வரர் கோயில், முகப்பேரில் உள்ள பஞ்சமுக சிவன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பல்வேறு கோயில்கள் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிவாலயங்களில் நேற்று இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடத்தப்பட்டது. இரவு 8.30 மணி, 11 மணி, அதிகாலை 1 மணி, 3 மணிக்கு சிறப்பு அபிஷேங்கள் செய்யப்பட்டன.
விழாவையொட்டி பக்தர்கல் விடிய விடிய கண் விழித்து காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications