பொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்
சென்னை: இன்றைய இணையதளம், பேஸ்புக் மற்றும் சமூக வலைதளம் மூலம் ஏற்படும் காதல்கள் அனைத்தும் ஒரு அபாய வலை. அதில் பெண்கள் கண்மூடி தனமாக சிக்கிக் கொள்கிறார்கள். இந்த மாய வலையை பற்றி பேசும் திரைப்படம் தான் கருத்துகளை பதிவு செய்.
அந்த மாயவலையில் சிக்கிக் கொண்ட ஒரு பெண், எப்படி அந்த நயவஞ்சகம் செய்த அயோக்கியர்களிடம் இருந்து தப்பித்து வெளியில் வருகிறாள் என்பது தான் இந்த படத்தின் கதை.
திகிலான ஹாரர் படங்கள் என்றாலே ரசிகர்களிடம் ஒரு தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் சமூகத்தில் தற்போது பெரும் பிரச்சனையாக இருந்து வரும் சமூக வலைதளங்களால் ஏற்படும் காதல் விளையாட்டுகள் மற்றும் அதனால் அந்த பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், ஏமாற்றங்கள் இவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் கருத்துகளை பதிவு செய். அதோடு, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை பற்றியும் இந்த படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பழம் பெரும் நடிகரான எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் உபாசனா ராய். ஆர்.பி.எம் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜித்தன் 2 என்ற திகில் படத்தை இயக்கிய ராகுல் பரமகம்சா இப்படத்தை இயக்குகிறார்.
இன்றைய இணையதளம், பேஸ்புக் மற்றும் சமூக வலைதளம் மூலம் ஏற்படும் காதல்கள் அனைத்தும் ஒரு அபாய வலை. அதில் பெண்கள் கண்மூடி தனமாக சிக்கிக் கொள்கிறார்கள். இந்த மாய வலையை பற்றி பேசும் திரைப்படம் தான் கருத்துகளை பதிவு செய்.
அந்த மாயவலையில் சிக்கிக் கொண்ட ஒரு பெண், எப்படி அந்த நயவஞ்சகம் செய்த அயோக்கியர்களிடம் இருந்து தப்பித்து வெளியில் வருகிறாள் என்பது தான் இந்த படத்தின் கதை.
இப்படம் சென்சார் போர்டு தலைமை அதிகாரியின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட போது அந்த அதிகாரி இது மாதிரியான படங்கள் சமூகத்திற்கும் இந்த கால தலைமுறையினருக்கும் மிக மிக அவசியம் என இயக்குனர் ராகுல் பரமகம்சாவை பாராட்டி வாழ்த்தியுள்ளார். மேலும் இப்படம் U/A சான்றிதழையும் பெற்றுள்ளது.
நவம்பர் மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் பரணி. ஒளிப்பதிவு செய்துள்ளார் மனோகரன். மக்களிடம் நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லும் இது போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்பது நிச்சயம்.
காமெடி நடிகர்
இப்போதைய டிரண்டாக திரைப்படங்களில் காமெடி செய்யும் நடிகர்களை சின்னத் திரையில் நடிக்க வைப்பது இருக்கிறது. சன் டிவியின் ராசாத்தி சீரியலில் மிகவும் பிரபல காமெடி நடிகர் செந்தில் நடித்து இருக்கிறார். இது போல நகைச்சுவை நடிகை கோவை சரளா சன் டிவியின் அருந்ததி சீரியலில் கெஸ்ட் ரோல் பண்ணினார்.
முத்துக்காளை நடிகர்
முத்துக்காளை பிரபல காமெடி நடிகர். விஜயகாந்த் படத்தில் சாச்சு புட்டங்கடா என்று சரசரவென்று ஓடி வைக்கோல் போரில் விழுவார் செம காமெடியாக வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அந்த காட்சிகள். அவரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
ஷூட்டிங் ஹரித்வார்
சீரியலின் கதைப்படி ஹீரோயின் ஹரித்துவாரில் பிறந்து வளர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்.எப்படியோ தமிழ்நாட்டு மருமகளாக வர நேர்ந்துவிடுகிறது. ஆனால், மருமகளும் அல்ல என்கிற உண்மையை நான் எப்படி சொல்லப் போகிறேன் என்று ப்ரோமோவில் ஹீரோயின் சொல்லி இருக்கார்.
ஹரித்வார் முக்கியம்
வட மாநிலங்களில் ஹரித்வார் புண்ணிய பூமியில் படமாக்கி இருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. ஆனாலும், பிறகு தமிழ் நாட்டில்தான் கதை எனும்போது கொஞ்சம் ஏமாற்றம் வருகிறது.எப்படியோ மகராசி சீரியல் மெகா சீரியலாக மக்கள் மனத்தைக் கவர்ந்தல் சரி.