"விட மாட்டேன்.. யாருக்கு சீட் இல்லை.. எனக்கா".. ஆபீஸ் வாசலில் மொட்டையடித்து.. பரபரப்பை கிளப்பிய பெண்
தலைக்கு மொட்டை அடித்து கொண்ட காங்கிரஸ் பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: "யாரை பார்த்து சீட் இல்லைன்னு சொல்றீங்க" என்று பொங்கிய பெண் ஒருவர், ஒட்டுமொத்த கேரளாவையும் அதிர வைத்துள்ளார்.. ஊரெல்லாம் இதே பேச்சாகத்தான் இருக்கிறது... யார் அவர்? என்ன காரணம்?
Recommended Video

கேரளாவில் 120 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டப்பேரவைக்கு வரும் 6ம் தேதியன்று தேர்தல் நடக்க போகிறது..ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜகவும் களத்தில் உள்ளன...
இதில் கேரள காங்கிரஸ் சற்று தடுமாற்றத்துடனேயே பயணித்து வருகிறது.. நாளுக்கு நாள் அங்கு சர்ச்சைகளும், குழப்பங்களும் நடந்து கொண்டே வருகின்றன.. சமீபத்தில்தான் காங்கிரஸின் மூத்த தலைவர் பிசி சாக்கோ ராஜினாமா செய்தார்.

ராகுல்
அதேபோல, மாநில காங்கிரஸ் செயலாளர் எம்எஸ் விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர் கேகே விஸ்வநாதன், மகளிர் காங்கிரஸ் செயலாளர் சுஜயா வேணுகோபால், மாவட்ட பொதுச் செயலாளர் அனில் குமார் என 4 முக்கிய புள்ளிகள் கட்சியில் இருந்து விலகினர்.. இவர்கள் 4 பேருமே, ராகுலின் வயநாடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்... இந்த அதிர்ச்சியே விலகாத நிலையில்தான் லத்திகா சுபாஷூம் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
யார் இந்த லத்திகா சுபாஷ்?
இந்த முறை தங்களுடைய வேட்பாளர் லிஸ்ட்டை காங்கிரஸ் அறிவித்தது... ஆனால், இந்த வேட்பாளர் பட்டியலை பார்த்த பலருக்கும் பெரும் அதிர்ச்சி கிடைத்தது.. காரணம், இந்த முறை கட்டாயம் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை...

லத்திகா சுபாஷ்
இப்படி அதிருப்திக்கு உள்ளானவர்களில் ஒருவர்தான் லத்திகா சுபாஷ்... கேரள மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.. பலரை போலவே இவரும் தனக்கு இந்த முறை சீட் கிடைக்கும் என்று மலைபோல நம்பிக் கொண்டிருந்தவர்.. ஆனால் கிடைக்கவில்லை... இதனால் கடும் அதிருப்தி அடைந்த லத்திகா சுபாஷ், கேரள காங்கிரசின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார்..

பரபரப்பு
அங்கே தனது தலையை மொட்டையடித்தார். இதனால் கட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெண்களை புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மகிளா காங்கிரஸ் தலைவி பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதைவிட, மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற ஆதங்கமே லத்திகாவின் பேச்சில் வெளிப்படுகிறது..

பேட்டி
செய்தியாளர்களிடம் இவர் பேசும்போது, "இந்த முறை, 27 வயது பெண்ணுக்கு சீட் தந்திருக்கிறார்கள்.. அதை வரவேற்கிறேன்... ஆனால், பல மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. இது ஏற்க முடியாதது.. நான் இந்த கட்சிக்காக பல வருஷம் பணியாற்றி வந்திருக்கிறேன்.. கட்சிக்காக உழைத்த பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.. 20 சதவீதம் வேட்பாளர்களுக்காவது ஒதுக்கீடு வழங்கக் கோரியிருந்தோம்... அதுவும் நடக்கவில்லை.. சிட்டிங் எம்எல்ஏக்களைவிட எனக்கு அதிக அனுபவம் இருக்கிறது.. 16 வருஷம் பாடுபட்டு என்ன பிரயோஜனம்?

விலகல்
ஒவ்வொரு எம்எல்ஏ, எம்பி தேர்தல்களிலும் என்னை போன்ற மூத்த பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்களே ஏன்? அதனால் நான் கட்சியில் இருந்து விலகுகிறேன்.. சுயேச்சையாக போட்டியிடலாமா என்றுகூடஇன்னும் முடிவெடுக்கவில்லை.. இன்னொன்றையும் சொல்லி கொள்கிறேன்.. இந்த அதிருப்திக்காக வேற ஒரு கட்சியிலும் சேர மாட்டேன்" என்றார்.

மொட்டை
லத்திகா இப்படி ஆவேசமாக பேசின கையோடு இன்னொரு பகீர் காரியத்தையும் செய்தார்.. கேரள மகளிர் காங்கிரஸ் ஆபீசின் வாசலிலேயே உட்கார்ந்து தன் தலைக்கு மொட்டை அடித்து கொண்டார்.. அப்போது இதை பார்த்து, உடன் இருந்த மற்ற பெண் நிர்வாகிகள் அதிர்ந்து போய்விட்டனர்.. கண் கலங்கினர்..!

அவமானம்
இதற்கு காரணம், லத்திகா ரொம்பவும் மென்மையானவராம்.. அதேசமயம் கொள்கைப்பிடிப்பு மிக்கவர் என்றும் சொல்கிறார்கள்.. இப்படி திடுதிப்பென்று மொட்டை அடித்து கொண்டு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. லத்திகா சுபாஷின் இந்த துணிச்சல் நடவடிக்கையை கண்டு, கேரள காங்கிரஸ் கூடாரமே வெலவெலத்து போயுள்ளதுடன், அவமானத்திலும் கூனிகூறுகி கொண்டிருக்கிறது..!
-
டீ போட்டு தராத மருமகளை போட்டுத்தள்ளிய மாமியார்.. அதுவும் எப்படி தெரியுமா.. ஆடிப்போன கேரளா -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
காங்கிரஸின் ஒரே நம்பிக்கையிலும் ஆப்பு.. கேரளா சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! என்ன இப்படி ஆகிடுச்சு -
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
மோடி திறந்து வைத்த சாலையை.. தனியாக திறந்து வைத்த கேரள அமைச்சர்! ஒரு ரோடும் தேர்தல் படுத்தும் பாடும் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை?












Click it and Unblock the Notifications