ஆசை யாரை விட்டது... மீண்டும் ராஜ்யசபா சீட் எதிர்பார்க்கும் மைத்ரேயன்
சென்னை: அதிமுக சார்பில் இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்த மைத்ரேயன் மூன்றாவது முறையாகவும் அந்த பதவியை குறிவைத்து செயல்படுவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவால் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மைத்ரேயன் அங்கு தனது தொடர்புகளை விரிவுபடுத்திக்கொண்டார். மறைந்த அருண் ஜேட்லி முதல் இப்போது இருக்கும் மத்திய அமைச்சர்கள் வரை அனைவரும் மைத்ரேயனுக்கு நெருக்கமானவர்கள். இதன்மூலம் ஜெயலலிதாவுக்காக டெல்லியில் அரசியல் லாபி செய்து வந்தார் மைத்ரேயன். இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தத்தின் போது அவரதுக்கு ஆதரவளித்து அவர் பக்கம் நின்றார்.

தன்னை நம்பி வந்ததால் ஓ.பன்னீர்செல்வம் எப்படியும் கைவிடமாட்டார், உரிய கவுரத்தை கட்சியில் பெற்றுத்தருவார் என அவரை மலைபோல் நம்பினார் மைத்ரேயன். ஆனால் நடந்ததும், நடப்பதும் தலைகீழாகவே இருந்து வருவதால் கடும் விரக்திக்கு சென்றுள்ளார் மைத்ரேயன். கடந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால் தலைமை வாய்ப்பு தரவில்லை. இப்போது மீண்டும் தனக்கு ராஜ்யசபா சீட் வாங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் இந்த முறையும் மைத்ரேயனுக்கு அதிமுக தலைமை வாய்ப்பு தராது எனக் கூறப்படுகிறது. அதுபற்றி விசாரித்தால், ஒருவருக்கு எத்தனை முறைதான் பதவியை திருப்பி திருப்பி தர முடியும் என்றும், கட்சியில் உள்ள மற்ற சீனியர்கள் எல்லாம் இதனால் பிரச்சனை செய்யக்கூடும் எனவும் அதிமுக தலைமை நினைப்பதாக பதில் கிடைத்தது. மேலும், மைத்ரேயன் சற்று விவரமான நபர் என்பதால் அவர் தனியாக ஒரு லாபி செய்து அது தங்களுக்கு சிக்கலை உண்டாக்கி விடக்கூடாது எனவும் கட்சி தலைமை நினைக்கிறதாம்.
இதனிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ட்வீட்டரில் பதிவு ஒன்றை போட்ட மைத்ரேயன், காய்ச்சல் உடல்சரியில்லை என்றும் மனதும் தான் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் அதிமுக தலைமை மீது மைத்ரேயன் அதிருப்தியில் உள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் அதேசமயம் மைத்ரேயனுக்கு பயந்தெல்லாம் இங்கு யாரும் கட்சி நடத்தவில்லை, அதனால் அவர் என்ன முடிவெடுத்தாலும் சரி என்கிற மனநிலையில் இருக்கிறார்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள்.
-
அடிச்சு ஓட விட்ருவோம் பாரு! அதிமுகவுக்கு ஜம்ப் ஆன காளியம்மாள் யார்? மீனவ பெண்ணின் "வேங்கை மகன்" மூவ் -
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications