சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் பெரிய மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 7,8,9,10, 12-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மற்றும் 26,27 ஆகிய தேதிகளில் கோட்டையம் மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வந்தடையும். எர்ணாகுளம், ஆலப்புழா போன்ற ரயில் நிலையம் செல்லாது. மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூரில் இருந்து ஜனவரி 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை (6, 12, 13, 14, 15, 19, 20, 25, 26, 27 தவிர) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "திருவனந்தபுரம் கோட்டத்தில் இந்த மாதம் (ஜனவரி) பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்:- குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16128), வருகிற 7,8,9,10, 12-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மற்றும் 26,27 ஆகிய தேதிகளில் கோட்டையம் மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வந்தடையும். எர்ணாகுளம், ஆலப்புழா போன்ற ரயில் நிலையம் செல்லாது.

சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்டிரல் செல்லும் ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரயில் (22207), வருகிற 9,16,23 ஆகிய தேதிகளில் கோட்டயம் மாற்றுப்பாதை வழியாக திருவனந்தபுரம் செல்லும். எர்ணாகும், ஆலப்புழா செல்லாது.
சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16127) வருகிற 3, 10 ஆகிய தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக குருவாயூர் சென்றடையும். இதே ரயில் 5, 7, 14 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாகவும், 8, 12 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாகவும், 9, 13 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் தாமதமாகவும், 16-ந்தேதி 20 நிமிடம் தாமதமாகவும், 20, 23, 26 ஆகிய தேதிகளில் 2 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாகவும் குருவாயூர் சென்றடையும். ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ரயில்வே அதிகாரபூர்வ இணையதளம், என்.டி.இ.எஸ். செயலி மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள இன்னொரு செய்திக்குறிப்பில் கூறுகையில் : மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூரில் இருந்து ஜனவரி 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை (6, 12, 13, 14, 15, 19, 20, 25, 26, 27 தவிர) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-16128) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரயில், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் கூடுதலாக நின்று செல்லும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications