Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று முதல் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு கிரேட் நியூஸ்.. தமிழக அரசின் 'என்ஆர்ஐ ஆப்' தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தபடி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் புகார்களைத் தடையின்றி பதிவுசெய்ய பிரத்யேக செயலியை தமிழ்நாடு காவல் துறை அறிமுகம் செய்துள்ளது. இன்று முதல் (ஆக 4) இந்த ஆப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இன்று முதல் புதிய செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

Major good relief for Tamils living abroad, TN Police released User guide for NRI’s Grievances Management System

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 13.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரின் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் அறிவித்ததன்படி, காவல்துறை தலைமை அலுவலகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு ஜூலை 2022 முதல் செயல்பட்டு வருகிறது. இப்பிரிவானது வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் குறைகளை தீர்த்து வைப்தற்காக துவக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் புகார்களை தங்குதடையின்றி பதிவு செய்தவற்கு ஏதுவாக , தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் பிரத்யேக செயலி ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியானது இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. எனவே வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்த பிரத்யேக செயலியில் புகார்களை பதிவு செய்தவுடன், புகார்தாரர்களுக்கான தனி முகவரி எண் உருவாக்கப்படும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் பெறப்படும் புகார் மனுக்கள்,சரிபார்ப்பிற்கு பின்னர் சம்பந்தப்பட்ட மாநகர, மாவட்ட காவல்துறையின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் உரிய விசாரணைக்கு பிறகு அறிக்கையின் விவரங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் உள்ள அதிகாரியன் அங்கீகாரத்துடன் புகார்தாரருக்கு அனுப்பி வைக்கப்படும்.

புகார் மனுக்கள் தொடர்பான அறிக்கைகளை இச்செயலி மூலம் தேதி வாரியாகவும், நாடு வாரியாகவும், புகாரின் வகை வாரியாகவும், புகார் மனுக்கள் மீதான நிலைமை வாரியாகவும் பல்வேறு அறிக்கைகளாக பெற்றுக் கொள்ளலாம். இந்த செயலிக்கான இணைப்பு தமிழ்நாடு காவல்துறை வலைதளத்தில் https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?10 இருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பயனர் வழிகாட்டி, தமிழ்நாடு காவல்துறை யூடியூப் சேனலில (tnpoliceofficial) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இச்செயலில் புகார் தெரிவிப்பது குறித்து ஏதேனும் கேள்விகள் இருப்பின் வெளிநாடு வாழ இந்திடியர்கள் பிரிவு தொலைபேசி எண் 044-28470025 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+