கூகுள் பே இருக்குல்ல? நீங்க இதை செய்தால் "யுபிஐ" மூலம் மொத்த பணமும் போயிடும்.. போலீஸ் அவசர அலர்ட்
சென்னை: ஆன்லைன் மோசடிகள் பெருகி வரும் நிலையில், பலரும் தங்கள் பணத்தை மோசடிப்பேர்வழிகளிடம் இழந்து தவித்து வருகிறார்கள்.. எனவே, சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து முக்கிய அறிவுரையையும், அது தொடர்பான எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.
ஆன்லைன் வசதிகள் பெருக பெருக, அது தொடர்பான மோசடிகளும் நடந்து வருகின்றன.. அந்தவகையில், கூகுள் பே-வில் நாளுக்கு நாள் புதுவிதமான மோசடி ஆரம்பமாகி உள்ளது.

பரிவர்த்தனைகள்: இப்போதெல்லாம் டீக்கடைகள் முதல் ஷாப்பிங் மால்கள் வரை, ஆன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகள் எனப்படும் கூகுள் பே ஆப் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதனால்தான், நூதன முறையில் மோசடிகளும் மலிந்துவிருகின்றன.
எனவே, UPI பரிவர்த்தனைகள் செய்பவர்கள், யாருக்காவது பணத்தை செலுத்துகிறீர்கள் என்றால் அவரின் பெயரை சரிபார்த்து பிறகே அனுப்ப வேண்டும்.. பெயரை உறுதி செய்யாமல் மற்றவருக்கு பணம் அனுப்புவது ஆபத்தானது.. அதேபோல, UPI பின்னை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது.. UPIல் முக்கிய ஆப்ஷனாக உள்ள QR ஸ்கேனை பணத்தை செலுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தவறுதலாக பணம்: எனினும், கூகுள் பே செயலியின் மூலம் ஒருவரது நம்பருக்கு, அல்லது UPI ID-க்கு வேண்டுமென்றே தவறுதலாக பணத்தை அனுப்பும் மோசடி நபர், தாம் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாகக் சொல்லி மறுபடியும் மீண்டும் அந்த பணத்தை அவரது எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு சொல்கிறாராம்.. அப்படி பணத்தை நாம் திருப்பி அனுப்பும்பட்சத்தில், நம்முடைய வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிடும்.. பணமும் பறிபோய்விடும்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, "சமீப நாட்களாகவே புதிய வகை மோசடி தொடங்கியுள்ளது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்குக்கு Google Pay மூலமாக பணம் அனுப்புகிறார்.. மேலும் உங்கள் பணத்தின் கணக்கில் தவறுதலாக பணம் இருந்ததாக உங்களுக்குத் தெரிவிக்க உங்களை போனில் அழைக்கிறார்.
ஹேக் செய்யப்படும்: அதன் பிறகு தவறுதலாக அனுப்பிய பணத்தை அவர்களின் எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும்...
எனவே, யாராவது உங்கள் கணக்கில் தவறாகப் பணம் பெற்றிருந்தால் அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். இந்த மோசடி ஆங்காங்கே நடைபெற தொடங்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் " என்று சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
அதேபோல, பணத்தை பெறுவதற்கு QR ஸ்கேன் செய்ய தேவையில்லை. ஆப்களை இன்ஸ்டால் செய்யுமாறு, போனில் மெசேஜ் வந்தால், அதையும் தவிர்க்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications