கூகுள் பே இருக்குல்ல? நீங்க இதை செய்தால் "யுபிஐ" மூலம் மொத்த பணமும் போயிடும்.. போலீஸ் அவசர அலர்ட்
சென்னை: ஆன்லைன் மோசடிகள் பெருகி வரும் நிலையில், பலரும் தங்கள் பணத்தை மோசடிப்பேர்வழிகளிடம் இழந்து தவித்து வருகிறார்கள்.. எனவே, சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து முக்கிய அறிவுரையையும், அது தொடர்பான எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.
ஆன்லைன் வசதிகள் பெருக பெருக, அது தொடர்பான மோசடிகளும் நடந்து வருகின்றன.. அந்தவகையில், கூகுள் பே-வில் நாளுக்கு நாள் புதுவிதமான மோசடி ஆரம்பமாகி உள்ளது.

பரிவர்த்தனைகள்: இப்போதெல்லாம் டீக்கடைகள் முதல் ஷாப்பிங் மால்கள் வரை, ஆன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகள் எனப்படும் கூகுள் பே ஆப் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதனால்தான், நூதன முறையில் மோசடிகளும் மலிந்துவிருகின்றன.
எனவே, UPI பரிவர்த்தனைகள் செய்பவர்கள், யாருக்காவது பணத்தை செலுத்துகிறீர்கள் என்றால் அவரின் பெயரை சரிபார்த்து பிறகே அனுப்ப வேண்டும்.. பெயரை உறுதி செய்யாமல் மற்றவருக்கு பணம் அனுப்புவது ஆபத்தானது.. அதேபோல, UPI பின்னை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது.. UPIல் முக்கிய ஆப்ஷனாக உள்ள QR ஸ்கேனை பணத்தை செலுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தவறுதலாக பணம்: எனினும், கூகுள் பே செயலியின் மூலம் ஒருவரது நம்பருக்கு, அல்லது UPI ID-க்கு வேண்டுமென்றே தவறுதலாக பணத்தை அனுப்பும் மோசடி நபர், தாம் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாகக் சொல்லி மறுபடியும் மீண்டும் அந்த பணத்தை அவரது எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு சொல்கிறாராம்.. அப்படி பணத்தை நாம் திருப்பி அனுப்பும்பட்சத்தில், நம்முடைய வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிடும்.. பணமும் பறிபோய்விடும்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, "சமீப நாட்களாகவே புதிய வகை மோசடி தொடங்கியுள்ளது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்குக்கு Google Pay மூலமாக பணம் அனுப்புகிறார்.. மேலும் உங்கள் பணத்தின் கணக்கில் தவறுதலாக பணம் இருந்ததாக உங்களுக்குத் தெரிவிக்க உங்களை போனில் அழைக்கிறார்.
ஹேக் செய்யப்படும்: அதன் பிறகு தவறுதலாக அனுப்பிய பணத்தை அவர்களின் எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும்...
எனவே, யாராவது உங்கள் கணக்கில் தவறாகப் பணம் பெற்றிருந்தால் அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். இந்த மோசடி ஆங்காங்கே நடைபெற தொடங்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் " என்று சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
அதேபோல, பணத்தை பெறுவதற்கு QR ஸ்கேன் செய்ய தேவையில்லை. ஆப்களை இன்ஸ்டால் செய்யுமாறு, போனில் மெசேஜ் வந்தால், அதையும் தவிர்க்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications