சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ரேஷன் கடைகளில் நடக்கும் மேஜர் மாற்றம்.. அரசு உத்தரவு
சென்னை: சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மண்டலங்களில் இயங்கி வரும் 340 ரேஷன் கடைகள் சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்ட எல்லைக்கு ஏற்ப மாற்றம் செய்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆணை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் வெளியிட்டுள்ள செயல்முறை ஆணையில் கூறியுள்ளதாவது: "கூட்டுறவுத்துறையின் கீழ் சென்னை இணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்-1), சென்னை இணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்-2) ஆகியவற்றின் கீழ் செயல்படும் 225 ரேஷன் கடைகள் (221 முழுநேரம், 4 பகுதி நேரம்) செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்திலும், 107 ரேஷன் கடைகள் (101 முழுநேரம், 6 பகுதிநேரம்) திருவள்ளூர் மாவட்டத்திலும் செயல்பட்டு வருகின்றன.

மேலும், காஞ்சீபுரம் மண்டலத்தின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் 8 முழுநேர ரேஷன் கடைகள் பெருநகர சென்னை மாநகராட்சி வரையறைக்குள் செயல்பட்டு வருகின்றன. கண்காணிப்பு பணிகளில் ஏற்படும் சிக்கல்களை களையும் வகையில் இந்த கடைகள் சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றன.
அதன்படி, சென்னை இணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்-2) மண்டலத்தில் இயங்கி வரும் காஞ்சீபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் 186 ரேஷன் கடைகள், மேடவாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் 38 ரேஷன் கடைகள், ஐ.ஏ.எப். பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் ஒரு ரேஷன் கடை என 225 ரேஷன் கடைகள் செங்கல்பட்டு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளன.
சென்னை இணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்-1) மண்டலத்தில் இயங்கி வரும் பூங்கா நகர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் 56 ரேஷன் கடைகள், சைதாப்பேட்டை தாலுகா வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் நடத்தும் 42 ரேஷன் கடைகள், காஞ்சீபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் 9 ரேஷன் கடைகள் என 107 ரேஷன் கடைகள் திருவள்ளூர் மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளன.
இதே போன்று, காஞ்சீபுரம் மண்டலத்தில் இயங்கி வரும் கொளப்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கம் நடத்தி வரும் 8 ரேஷன் கடைகள் சென்னை இணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்-2) மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளன. மொத்தத்தில் 340 ரேஷன் கடைகள் மாற்றம் செய்யப்பட உள்ளன" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications