மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலுக்கு முன்பு வரை திமுகவில் இணைய இருந்த தோழமை கட்சிகளின் முக்கிய புள்ளிகளுக்கு நோ சொல்லியிருந்த மு.க.ஸ்டாலின், தற்போது கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதனால் விரைவில் தோழமை கட்சிகளை சேர்ந்த தலைகள் அறிவாலயத்தில் அடைக்கலம் ஆவார்கள் என்று சொல்லப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் மொத்த களத்தையும் மாற்றி போட்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு வரை திமுக எடுத்த முடிவுகள், இப்போது செல்லாது என்று கைவிடப்பட்டு அதற்கு நேர்மாறான முடிவுகளை நோக்கி கட்சி செல்கிறது. இதற்கு ஓர் உதாரணம்தான் விசிகவின் பனையூர் பாபுவை கட்சியில் இணைத்தது.

Anna Arivalayam

வெயிட் கை பனையூர் பாபு

விசிகவின் வெயிட் கைகளில் பனையூர் பாபுவும் ஒருவர். பேருக்குதான் விசிக.. மற்றபடி விசுவாசம் எல்லாம் திமுகவுக்குதான். தேர்தலுக்கு முன்னரே திமுகவில் அவர் இணைய இருந்தது. ஆனால், கூட்டணி கணக்குகள் காரணமாக ஸ்டாலின் இதற்கு ஓகே சொல்லவில்லை. இப்படி இருக்கையில் தற்போது விசிக தவெக பக்கம் தாவி விட்டதால், பனையூர் பாபுவை இணைத்து கணக்கை நேர் செய்ய திமுக முயற்சிக்கிறது.

மாவட்ட செயலாளர்

பாபு விஷயத்தில் திருமாவளவன் திமுக தலைமையிடம் எவ்வளவோ கேட்டு பார்த்தார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. பாபுவை தொடர்ந்து, ஆளூர் ஷாநவாஸ் எஸ்.எஸ்.பாலாஜியையும் திமுக இழுக்க முயற்சித்து வருகிறது. கட்சி தாவினால் மாவட்ட செயலாளர் போஸ்ட்டிங் கன்பார்ம். இதனால் திருமா அப்செட் ஆகியுள்ளார்.

மதிமுகவும் காலி

இது இத்துடன் நிற்கவில்லை. மதிமுகவிலிருந்தும் முக்கிய புள்ளிகள் உள்ளே வருவதற்கு ஓகே சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். தேர்தலுக்கு முன்பு மதிமுகவிலிருந்து பிரிந்து புதிய கட்சியை உருவாக்கியிருந்த மல்லை சத்யா, திமுகவுக்கு ஓடி வந்து ஆதரவு கொடுத்திருந்தார். ஸ்டாலினை சந்தித்து பேச வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும் கூட்டணியில் உள்ள வைகோ கோபித்துக்கொள்ளக்கூடாது என்பதால் ஸ்டாலின் கடைசி வரை மல்லை சத்யாவை சந்திக்கவில்லை.

வாயை விட்ட துரை வைகோ

ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. திமுக சின்னத்தில் போட்டியிட்டது துர்திருஷ்டம் என்றும், திமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டது, சமூகநீதியை திமுக கடைபிடிக்கவில்லை என்றெல்லாம் துரை வைகோ பேசி வருகிறார். வெளிப்படையாக விஜய்க்கு ஆவர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

வைகோவும் தனது டோனை திமுகவுக்கு எதிராக மாற்றியிருக்கிறார். இப்படி இருக்கையில், அக்கட்சியிலிருந்து திமுகவில் இணைய காத்திருந்த பொடா அழகு சுந்தரம், திருப்பூர் துரைசாமி, கழக குமார் உள்ளிட்ட முக்கிய தலைகளை கட்சியில் இணைக்க திமுக தலைமை இசைவு தெரிவித்திருக்கிறது.

தவெகவுக்கு தாவும் அன்புமணி

மறுபுறம், அன்புமணி டீம் தவெக பக்கம் சாயும் நிலையில் சென்றுக்கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அன்புமணி தேர்தலை சந்தித்திருந்தாலும், தற்போது அதிமுக, பாஜக இரண்டும் பலவீனமடைந்திருக்கிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தவெக பக்கம் சைஸாக நகர்ந்துக்கொள்வோம் என்று அவர் யோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள் எங்கு போய் முடிவடைகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+