Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஸ்டர்மைண்ட் போட்டுத்தந்த "ரூட்".. டெல்லிக்கு 500 பேரை அனுப்பும் கமல்ஹாசன்.. ஆஹா.. மநீம கலக்குதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் 500 பேர் கொண்ட ஸ்பெஷல் குழுவை டெல்லிக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் தேர்தலுக்கு பின்பாக அந்த கட்சி பெரிதாக நம்பிக்கை அளிக்கவில்லை.

மக்கள் நீதி மய்யத்தில் இருந்த நிர்வாகிகள் பலர் திமுகவிலும், அதிமுகவிலும், சில பாஜகவிலும் கூட இணைந்தனர். கட்சியின் டாப் நிர்வாகிகள் பலர் வெளியேறினர்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இந்த நிலையில்தான் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக தயாராகிக்கொண்டு இருக்கிறது. கடந்த 16ம் தேதி கமல்ஹாசன் இது தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் கூட்டணி பற்றி பேசப்பட்டு இருக்கிறது. யாருடன் கூட்டணி வைக்கலாம், கூட்டணி வைத்தால் எத்தனை இடங்களை கேட்கலாம் என்றெல்லாம் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். பாஜக தரப்பிற்கு செல்வது சரியாக, காங்கிரஸ் கூட்டணியில் இணைவது சரியா என்று ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம்.

ஆலோசனை

ஆலோசனை

எம்பி தேர்தலில் போட்டியிடலாம் என்பது குறித்தும் கமல்ஹாசன் ஆலோசனை செய்து இருக்கிறாராம். அதாவது எம்பி தேர்தலில் கூட்டணி சார்பாக நின்று டெல்லிக்கு செல்லலாமா என்றும் கமல்ஹாசன் ஆலோசனை செய்து இருக்கிறாராம். இந்த கூட்டத்தை நடத்தும்படி சொன்னது ஒரு அரசியல் ஆலோசகர் ஆவார். அவர்தான் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துங்கள். மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்தால் நன்றாக இருக்கும். இதை கட்சி கூட்டத்தில் சொல்லி அவர்களின் கருத்துக்களை பெறுங்கள். நீங்கள் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும், என்று ஆலோசனை வழங்கி இருக்கிறாராம்.

மநீம

மநீம

இதை கேட்டுத்தான் கமல்ஹாசன் அந்த கூட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொள்வது தொடர்பாகவும் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்தே கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர்.. நாங்கள் என்ன கூட்டணி வைக்க போகிறோம் என்பது உங்களுக்கு விரைவில் புரிய வரும். நான் என்ன திசையில் செல்கிறேன் என்று நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்களே என் பயணத்தை புரிந்து கொண்டால், நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க போகிறோம் என்பது புரிந்துவிடும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நாங்கள் கலந்து கொள்வோம் என்றும் கூறினார். அதன்படி மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டிசம்பர் 24ல் இந்த பேரணியில் பங்கேற்க உள்ளார். 100வது நாளை கடந்து உள்ள இந்த யாத்திரை டெல்லியை விரைவில் அடைய உள்ளது. இதில் 24ம் தேதி கமல்ஹாசன் டெல்லியில் கலந்து கொள்ள இருக்கிறார். கமல்ஹாசனின் இந்த முடிவு கவனம் பெற்றுள்ளது.

கூட்டம்

கூட்டம்

இதற்காக பெரிய அணியை கமல்ஹாசன் தேர்வு செய்து வருகிறார். பிரபலங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் என்று பலர் அடங்கிய 500 பேர் கொண்ட குழுவை இதற்காக கமல்ஹாசன் இறக்க உள்ளாராம். அந்த ஆலோசகரின் அறிவுறுத்தலின் பெயரில் இவர்களை கமல்ஹாசன் தேர்வு செய்ய இருக்கிறாராம். இவர்களை டெல்லிக்கு அனுப்பி அவர்களுடன் இணைந்து கமல்ஹாசன் இந்த யாத்திரையில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாகும் விதமாக கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+