Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: கள்ளகுறிச்சி போலீஸின் குலைநடுங்க வைக்கும் கஸ்டடி சித்ரவதைகள்.. கதறும் 'குறவர்' செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெய்பீம், விசாரணை உள்ளிட்ட திரைப்படங்களில் போலீசார் கஸ்டடியில் சந்தேக நபர்களை கொடூரமாக குலைநடுங்க வைக்கும் சித்திரவதைகளுக்குள்ளாக்குவர். அப்படியே கொடூர சித்ரவதையை கள்ளக்குறிச்சி போலீசார் கட்டவிழ்த்துவிட்டதை குறவர் சமூகத்தைச் சேர்ந்த செல்வம் கதறலுடன் விவரித்துள்ளார்.

Recommended Video

    Jaibhim படம் மாதிரி Police சித்ரவதை செய்தாங்க! - குறவர் செல்வம் | Oneindia Tamil

    கள்ளக்குறிச்சி கொங்கராபாளையத்தை சேர்ந்த குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடியிருப்பில் போலீசார் உள்ளே நுழைந்து முதலில் 2 பேரை கைது செய்தது. பின்னர் ஒருவர் அடுத்ததாக மேலும் இருவர் என மொத்தம் 5 பேரை கைது செய்தது.

    இந்த 5 பேரும் திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் கஸ்டடியில் 3 நாட்களாக இருந்த இவர்கள் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக நாம் ஒன் இந்தியா இணையதளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறோம்.

    ஜெய்பீம் செங்கேணி

    ஜெய்பீம் செங்கேணி

    மேலும் இந்த 5 பேரில் சக்திவேலுவின் மனைவி கர்ப்பிணி. அவர் கண்ணீர் கதறலுடன் பேட்டி அளித்தது அப்படியே ஜெய்பீம் திரைப்படத்தின் செங்கேணி பாத்திரத்தை கண்முன்பே கொண்டு வந்தது. இதனையடுத்து விளக்கம் அளித்த போலீசார் 5 பேரில் 2 பேரை குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டோம்; 3 பேரை 13 கொள்ளை வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைக்கிறோம் என்றனர். ஆனால் 2 பேரை மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் சக்திவேல் கதி என்ன என்பது தெரியாமல் உறவினர்கள் கதறி வருகின்றனர்.

    போலீஸ் சித்திரவதை

    போலீஸ் சித்திரவதை

    இந்நிலையில் போலீசாரால் விடுவிக்கப்பட்ட செல்வம் என்பவர் போலீசார் நடத்திய சித்திரவதைகளை விவரிக்க விவரிக்க ஜெய்பீம், விசாரணை போன்ற சினிமா காட்சிகள் நிஜம் என்பதை நிரூபிக்கின்றன. குறவர் சமூகத்தைச் சேர்ந்த செல்வம் அளித்த கதறல் பேட்டியின் எழுத்து வடிவம்: அந்த ரோட்டுல என் பொண்டாட்டியும் நானும்தான் போயிருக்கிறோம் வந்திருக்கிறோம்.. நான் தனியாகூட போனது இல்லை.. நானும் பொண்டாட்டியும் வியாபாரத்துக்கு போவோம் என்று போலீசில் சொன்னேன். அப்ப எல்லாம் என்னை போலீஸ் அடிக்கலைங்க.. அப்படியே செவத்துக்கு பக்கம் திரும்பிக்கன்னு அவனை சொன்னாங்க..

    கட்ட விரலை கட்டிவிட்டு சித்ரவதை

    கட்ட விரலை கட்டிவிட்டு சித்ரவதை

    சேர்ல ஏறி அவனை நிக்கவெச்சு ரெண்டு கட்ட விரலையும் தூணில் கட்டிவிடுறாங்க.. அப்புறம் சேரை எடுத்துட்டு இறக்கிவிடுறாங்க.. சொல்லும்போதே உயிர் போயிடுதுங்க... அப்படியே நாடி நரம்பெல்லாம் இழுக்குது.. அந்தமாதிரி செஞ்சாங்க... கூட இருந்த அவங்களை அப்படி செஞ்சது எனக்கே பேச்சு மூச்சு இல்லை.. தர்மராஜையும் பிரகாஷையும் அப்படி செஞ்சாங்க.. அதுக்கு பிறகுதான் சக்திவேலையும் இன்னொருத்தரையும் பிடிச்சுட்டு வந்தாங்க.

    நடுகாட்டில் கண்ணை கட்டிவிட்டு

    நடுகாட்டில் கண்ணை கட்டிவிட்டு

    அப்புறம் பார்க்க விடாம கண்ணை கட்டிறாங்க.. தெரியவும் மாட்டீங்கது.. இருட்டா இருக்குது.. எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியலை.. பார்த்தா நடு பாரஸ்ட் காடா இருக்கு. சுத்தி முள்காடா இருக்கு.. அங்க வெச்சுட்டு கேட்குறாங்க.. கண்ணையும் தொறக்க விடமாட்டேங்கிறாங்க.. அத மாதிரி டார்ச்சர் பண்றாங்க.. நீங்க எல்லாம் திருடன் பொண்டாட்டிதான்னு சொல்றாங்க. தஞ்சாவூரில் இருந்து பொண்ணு ஊருன்னு பொழைக்க வந்தோம்.. தஞ்சாவூர்னாலே திருடன்னு சொல்றாங்க.. தஞ்சாவூர்னா பொண்ணும் கொடுக்க கூடாதாம்.. விருந்தாளியை பார்க்கவும் வரக் கூடாதாம்.. அது மாதிரி டார்ச்சர் பண்றாங்க.. இவ்வாறு செல்வம் கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+