ஏடிஎம்மில் நுழைந்த மர்மநபர்.. சுற்றி முற்றி பார்த்துவிட்டு செய்த "பகீர்" செயல்.. வைரலாகும் வீடியோ
சென்னை: ஏடிஎம் மையத்தில் நுழைந்த ஒருவர் ஏதோ ஏடிஎம் எந்திரத்தையே பெயர்த்து எடுத்துச் செல்வது போல் சென்றுவிட்டு கடைசியில் காமெடி பீஸான வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சிறிய பொருட்களாக இருந்தால் நமக்கு அது பிடித்து விட்டால் அதை எப்படியாவது "சுட்டு" விடுவது என்ற சிலரின் எண்ணமாக இருக்கும். உதாரணமாக ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையங்களில் தண்ணீர் அருந்த பெரிய டம்ளர் இருக்கும், அதை யாரும் இல்லாத நேரத்தில் சுட்டுவிடுவார்கள்.
இதற்காகவே அங்கெல்லாம் சங்கிலியுடன் டம்ளர் இணைக்கப்பட்டு அது எடுக்க முடியாதபடி ரயில்வே நிர்வாகமோ மாவட்ட நிர்வாகமோ செய்கிறது.

வீடு
வங்கி, வீடு, அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி என திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வங்கி ஏடிஎம்களிலும் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் வங்கி ஏடிஎம்களில் நுழையும் மர்மநபர்கள் வங்கி ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் காட்சிக ளை பார்த்துள்ளோம்.

ஏடிஎம் மையங்கள்
அது போல் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத பகல் வேலைகளில் தனியாக ஏடிஎம் மையத்திற்குள் வரும் பெண்களை நோட்டமிட்டு அவர்கள் பணத்தை எடுக்கும் போது பறித்து கொண்டு ஓடும் கும்பலையும் பார்த்துள்ளோம். காவலாளியை கொலை செய்து ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பது என நாள்தோறும் செய்திகள் வருகின்றன.

பேரிச்சம் பழம்
இப்போது டிரென்டிங் எல்லாம் என்ன தெரியுமா, ரஜினியின் குருசிஷ்யன் படத்தில் வரும் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. ரஜினி சிறையில் கைதிகளிடம் எதற்காக சிறைக்கு வந்தார்கள் என கேட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு அண்டா திருடி பேரிச்சழம் பழம் வாங்கலாம்னு திருடினேன் மாட்டிக்கிட்டேன் என ஒரு கைதி சொல்வார்.

திருட்டு சம்பவம்
அதற்கு ரஜினியோ பேரிச்சம் பழத்தையே திருடிட வேண்டியதுதானே என்பார். அது போல் இப்போது ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடுவதற்கு பதிலாகஏடிஎம் இயந்திரத்தையே திருடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

சானிடைசர்
இது குறித்த சிசிடிவி காட்சிகள் நிறைய பார்த்துள்ளோம். அது போன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஏடிஎம் மையத்திற்கு வரும் நபர் ஒருவர் முதலில் உள்ளே இருக்கும் சானிடைசரில் கைகளை சுத்தப்படுத்திக் கொள்கிறார்.

ட்விஸ்ட்
உடனே பர்சில் இருந்த ஏடிஎம் கார்டை எடுத்து போடுகிறார். அது பிராசஸ் ஆவதற்குள் மீண்டும் ஒரு முறை சானிடைஸ் செய்கிறார். பின்னர் பணம் வருவதற்குள் சுற்றும் முற்றும் பார்க்கிறார். பார்ப்பதற்கு பகீர் என்கிறது. சானிடைசரை பற்ற வைத்து அது எரிந்தவுடன் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்துச் செல்வார் என நினைத்த வேளையில் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார்.

சானிடைசர்
கடைசியில் பணம் வந்ததும் அதை எடுத்து பர்சில் வைத்து விட்டு மீண்டும் ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு சானிடைசரை எடுத்து தான் தோளில் மாட்டியிருந்த பைக்குள் போட்டு எடுத்துச் செல்கிறார். ஏதோ ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையடிப்பது போல் பீடிகை போட்டுவிட்டு கடைசியில் சானிடைசரை திருடிச் சென்று காமெடி பீஸாகிவிட்டார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications