லட்சுமியை மறக்க முடியல.. புது மாப்பிள்ளையின் கழுத்தை அறுத்த இளைஞர்.. கோர்ட்டில் சரண்!

இளைஞரை கொன்ற வழக்கில் ஒருவர் சரணடைந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    முன்னாள் காதலியுடன் தொடர்பு... கழுத்தை அறுத்த காதலியின் கணவன்

    சென்னை: காதலித்து திருமணம் செய்த இளைஞர், ஏற்கனவே தான் காதலித்த இன்னொரு பெண்ணுடன் உறவை புதுப்பித்து வளர்த்து வந்துள்ளார்.. இது கடைசியில் ஒரு கொலை வரை நடந்து முடிந்துள்ளது.

    சென்னை செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் முரளி. தனியார் மருந்து விற்பனை நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.. அதே பகுதியில் வசித்து வந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்தார்.

    இருவரும் வேறு வேறு சமூகம்.. முரளியை பெண் வீட்டில் ஏற்று கொள்ளவில்லை. ஆனால் காதலர்கள் 6 மாசத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டனர். ஒரு கட்டத்தில் கவுசல்யா வீட்டில் முரளியை ஏற்று கொண்டதாகவும் தெரிகிறது.

    டீ கடை

    டீ கடை

    இந்த நிலையில், 2 நாளைக்கு முன்பு வழக்கம் போல் மனைவியிடம் சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பி வந்துள்ளார் முரளி. காரப்பாக்கத்தில்தான் இவருக்கு ஆபீஸ்.. அதனால் ஆபீசுக்குள் நுழைவதற்கு முன்பு, எதிரில் இருக்கும் டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.

    முரளி

    முரளி

    அப்போது பைக்கில் வந்த ஒரு மர்ம நபர் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி முரளியை அழைத்து சென்றுள்ளார். பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென கத்தியை எடுத்த முரளியின் கழுத்தை அறுத்து சாய்த்தார். பிறகு பைக்கை எடுத்து கொண்டு பறந்தார். தகவலறிந்து கண்ணகி நகர் போலீசார் விசாரணையை கையில் எடுத்தனர். பைக்கில் வந்தவர் யார் என்பதை அங்கிருந்த சிசிடிவி கேமிரா பதிவு கொண்டு விசாரித்தனர்.

    திருமணம்

    திருமணம்

    விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளன. முரளி பணிபுரிந்து வந்த அதே நிறுவனத்தில் லட்சுமி என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். 3 வருட காதல்.. பிறகு இருவருக்கும் ஏதோ மனஸ்தாபம் காரணமாக பிரிந்துவிட்டனர். இதற்கு லட்சுமி அரவிந்தன் என்பவரை கல்யாணம் செய்துகொண்டார். முரளியும் கவுசல்யாவை கல்யாணம் செய்து கொண்டார்.

    அரவிந்தன்

    அரவிந்தன்

    ஒரு கட்டத்தில் பிரிந்த காதலர்கள் திரும்பவும் பேச ஆரம்பித்து விட்டனர்.. வீட்டுக்கு தெரியாமல் பழகவும் தொடங்கி விட்டனர். லட்சுமியை முரளியால் மறக்கவும் முடியவில்லை.. ஆனால் இந்த விஷயம் அரவிந்தனுக்கு தெரிந்துவிட்டது. அதனால்தான் தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். பைக்கில் வந்து முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு போனது அரவிந்தன்தான் என்பதை உறுதி செய்த போலீசார், அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மாதவரம் கோர்ட்டில் அரவிந்தன் சரண் அடைந்ததையடுத்து, ஜெயிலில் அடைக்கப்பட்டார். விரைவில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க கண்ணகி நகர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+