என்ன செந்தில்குமார் இப்படி பண்ணிட்டீங்க..டென்ஷனில் மடிப்பாக்கம் போலீஸார்!
மதுபோதையில் மெஷினை திருடி கொண்டு ஓடியவர் கைது செய்யப்பட்டார்
சென்னை: செந்தில்குமாருக்கு இந்த மிஷின் எதுக்கு உபயோகப்படும் என்று தெரியவில்லை. தண்ணி அடித்திருக்கிறார்களா என்று போலீசார் சோதனை செய்யும் மெஷினை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டார். ஏனென்றால், செந்தில்குமார் அப்போது போதையில் இருந்துள்ளார்!
சென்னை மடிப்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கனகராஜ். இவர் சக போலீசாருடன் ஈச்சங்காடு சிக்னலில் டிராபிக் சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது பைக்கில் ஒருவர் வேகமாக வரவும் அவரை தடுத்தி நிறுத்தினர். ஆனால் அவர் போதையில் இருப்பதுபோல கனகராஜுக்கு தோன்றியது. அதனால் மது அருந்தியுள்ளார்களா என்று கண்டறியும் மெஷினில் (இ-செல்லான் மெஷின்) அந்த நபரை ஊத சொன்னார்.
ஆனால் அந்த நபரோ, மெஷினை வாங்கி ஊதி, பிறகு திரும்பவும் போலீசாரிடம் தந்தார். அப்போது அவர் கன்பார்ம் ஆக தண்ணி அடித்திருப்பது தெரிந்தது. அதனால் கனகராஜ் அந்த நபர் மீது கேஸ் புக் செய்து கொண்டிருந்தார்.
ரெட் கலர் சுடிதார்.. பார்க்க படு ஸ்மார்ட்.. ஆனால் செய்த வேலையை பாருங்கள்!
அந்த போதை ஆசாமி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, போலீசாரிடம் இருந்து மிஷினை தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது மிஷின் கீழே விழுந்துவிட்டது. திரும்பவும் எடுத்து கொண்டு ஓடினார்.
விசாரணையில்தான் அவர் பெயர் செந்தில்குமார் என்பதும், கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து பொது சொத்தை சேதம் விளைவித்தது உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.