Exclusive: மணிப்பூரில் இதுதான் ரியல் பிரச்சனை.. இரோம் சர்மிளா சொன்ன கசப்பான உண்மை
சென்னை: மணிப்பூர் சம்பவம் குறித்து ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா, மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் மோடி வேண்டுமென்றே அறியாமையுடன் செயல்படுவது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.
கடந்த மே 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த வீடியோ இணையத்தில் நேற்று முன் தினம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பேசிய மணிப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா , தற்போது நடைபெற்ற நிகழ்வுகள் மிகவும் மோசமானது, உண்மையில் மனிதாபிமானமற்றது. மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியை கடைபிடிப்பதாகவும் குற்றம்சாட்டினார். மணிப்பூரில் இயல்புநிலை திரும்புவது பற்றி அவர் எதுவும் பேசவில்லை என்றும், மணிப்பூர் மாநில அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.
இதுபற்றி ஒன் இந்தியா தமிழ் யூடியூப் தளத்திற்கு பேட்டி அளித்தார். அப்போத நெறியாளர் அவரிடம், மணிப்பூரில் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டு இழுத்து செல்லப்பட்ட போது மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணான நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு இரோம் சர்மிளா கூறும் போது, இந்த நிகழ்வு மிக மோசமானது.
மணிப்பூர் மக்களை சுற்றிலும் எப்போதும் போலீசார், ராணுவத்தினர் இருந்துக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களில் நடந்த நிகழ்வு மிக மோசமானது. மத்தியிலும் ஆளும் பாஜக அரசும்,மாநிலத்தை ஆளும் பாஜக அரசும் இந்த விவகாரத்தை முறையாக கையாளவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் மோசமான நிகழ்வுகள் நடந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி வேண்டுமென்றே அறியாமையுடன் செயல்படுவது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் கூறினார்.

தொடர்ந்து நெறியாளர் பேசும் போது, மணிப்பூரில் என்ன மாதிரியான பிரச்சனை இருக்கிறது. பிரச்சனை எங்கு ஆரம்பம் ஆனது. இந்த பிரச்சனை எப்படி ஆரம்பித்தது என்று கேட்டார்.இதற்கு பதில் அளித்த இரோம் சர்மிளா, உண்மையில் இப்போது அங்கு என்ன பிரச்சனை நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. இப்போது அங்கு குக்கி மற்றும் மற்ற இனத்தினரிடையே என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் மணிப்பூரில் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரியஅளவில் உயர்ந்து உள்ளது. இதனிடையே வேலை இல்லாத சூழலில் இளைஞர்கள் போதைப்பொருள் கடத்துவது அதிகரித்துள்ளது. மியான்மர் எல்லையில் மணிப்பூர் இருப்பதால் அதிகம்பேர் இதுபோன்று போதை பொருட்களை கடத்துவதில் இறங்கினார்கள் என்று கூறினார்.
மணிப்பூர் மக்களின் வாழ்க்கை முறை எப்படி, அவர்கள் வாழ்கிறார்கள், அவர்களின் பழக்கம் எப்படி என்பது உள்ளிட்ட பின்னணி குறித்து விரிவாக பேசிய இரோம் சர்மிளா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை அங்கு அமைதியை ஏற்படுத்தவில்லை என்று கூறினார். இரோம் சர்மிளா பேசிய முழு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் பாருங்கள் .
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications