குடியுரிமை சட்ட திருத்தம்: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை முற்றுகையிட முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Manitha Neya Makkal Katchi hold protest against CAA

சென்னையில் இன்று மாலை மனித நேய மக்கள் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அனைவரையும் பட்டினப்பாக்கத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது சிலர் போலீசாரின் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தடுத்த இடத்திலேயே குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அனைவரும் கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+