காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில்... தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு -ஜவாஹிருல்லா
சென்னை: காவிரி மேலாண்மை வாரிய ஆணையத்தை மத்திய நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வந்திருப்பது தமிழக மக்களுக்கு பச்சைத் துரோகம் செய்யும் செயல் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரிய ஆணையம் தன்னிச்சை அமைப்பாக செயல்பட தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பாஜக அரசு
தமிழ்நாடு - கர்நாடகத்திற்கு இடையே உள்ள காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென 2018ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. .. காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தனித் தலைவரை நியமிக்க வேண்டிய தமிழக எதிர்க் கட்சிகள் கோரிவந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவரையே காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக நியமித்து தனது பாரபட்சத்தை வெளிப்படுத்தியது பாஜக அரசு.

பச்சைத்துரோகம்
இந்நிலையில் தன்னிச்சையான அமைப்பு என அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது மத்திய பாஜக அரசு. மத்திய அரசின் இந்த முடிவு தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பச்சை துரோகமாகும். காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துவரும் மத்திய பாஜக அரசு காவேரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர் வளத்துறையுடன் இணைத்திருப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும்.

பேரதிர்ச்சி
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் துரோகச் செயலாகும். மத்திய பாஜகஅரசின் இந்த நடவடிக்கையால் அதிகாரமற்ற அமைப்பாகக் காவிரி மேலாண்மை ஆணையம் மாறி, அதன் செயல்பாடுகள் முடங்கும் நிலைக்கு இந்த முடிவு வழிவகுக்கும். கொரோனா நோய் தொற்று பிரச்சினையில் வாழ்வாதாரத்தை இழந்த தமிழக விவசாயிகளைக் காக்க வேண்டிய மத்திய அரசு அவர்களுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளது விவசாயிகளுக்குப் பேரதிர்ச்சியாக உள்ளது.

அரசுக்கு கோரிக்கை
எனவே மத்திய அரசு நீர் வளத்துறையுடன் இணைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான அரசிதழ் அறிவிப்பை ரத்து செய்து, முன்பை போல் தன்னிச்சை அமைப்பாக அது செயல்பட நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து மத்திய அரசுக்கு கடும் அழுத்தம் தர முன் வர வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications