காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில்... தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு -ஜவாஹிருல்லா
சென்னை: காவிரி மேலாண்மை வாரிய ஆணையத்தை மத்திய நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வந்திருப்பது தமிழக மக்களுக்கு பச்சைத் துரோகம் செய்யும் செயல் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரிய ஆணையம் தன்னிச்சை அமைப்பாக செயல்பட தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பாஜக அரசு
தமிழ்நாடு - கர்நாடகத்திற்கு இடையே உள்ள காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென 2018ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. .. காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தனித் தலைவரை நியமிக்க வேண்டிய தமிழக எதிர்க் கட்சிகள் கோரிவந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவரையே காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக நியமித்து தனது பாரபட்சத்தை வெளிப்படுத்தியது பாஜக அரசு.

பச்சைத்துரோகம்
இந்நிலையில் தன்னிச்சையான அமைப்பு என அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது மத்திய பாஜக அரசு. மத்திய அரசின் இந்த முடிவு தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பச்சை துரோகமாகும். காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துவரும் மத்திய பாஜக அரசு காவேரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர் வளத்துறையுடன் இணைத்திருப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும்.

பேரதிர்ச்சி
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் துரோகச் செயலாகும். மத்திய பாஜகஅரசின் இந்த நடவடிக்கையால் அதிகாரமற்ற அமைப்பாகக் காவிரி மேலாண்மை ஆணையம் மாறி, அதன் செயல்பாடுகள் முடங்கும் நிலைக்கு இந்த முடிவு வழிவகுக்கும். கொரோனா நோய் தொற்று பிரச்சினையில் வாழ்வாதாரத்தை இழந்த தமிழக விவசாயிகளைக் காக்க வேண்டிய மத்திய அரசு அவர்களுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளது விவசாயிகளுக்குப் பேரதிர்ச்சியாக உள்ளது.

அரசுக்கு கோரிக்கை
எனவே மத்திய அரசு நீர் வளத்துறையுடன் இணைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான அரசிதழ் அறிவிப்பை ரத்து செய்து, முன்பை போல் தன்னிச்சை அமைப்பாக அது செயல்பட நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து மத்திய அரசுக்கு கடும் அழுத்தம் தர முன் வர வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications