மருத்துவமனையில் எஸ்.பி.பி.-மனோபாலா ட்விட்டரில் வெளியிட்ட படம்- பெரும் நம்பிக்கையில் ரசிகர்கள்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் படம் ஒன்றை இயக்குநரும் நடிகருமான மனோபாலா தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'எங்கள் பாடுநிலா பாலு' மீண்டும் வந்துவிடுவார் என்ற உறுதியைத் தருகிறது இந்த படம் என பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
Recommended Video
தமக்கு கொரோனா பாதிப்பு மிக மிக லேசாக இருக்கிறது என அறிவித்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றார் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். சென்னை மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார்.
SP balasubrahmanyam: பாலு...சீக்கிரமா எழுந்துவா..உனக்காக காத்திருக்கிறேன்: இசைஞானி இளையராஜா உருக்கம்
இந்த நிலையில் இன்ற் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு அத்தனை நெஞ்சங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று சொன்னது அந்த அறிக்கை.
இதனால் பாரதிராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்களுடன் ரசிகர்களும் 'பாலுவுக்காக' பிரார்த்தனை செய்தனர். அப்போதுதான் எஸ்பிபியின் மகன் சரண், தந்தையின் உடல்நிலையில் கவலைப்படும் அளவுக்கு நிலைமை இல்லை என கூறினார்.
அதேநேரத்தில் இயக்குநரும் நடிகருமான மனோபாலா தமது ட்விட்டர் பக்கத்தில், அண்ணா வாங்க... வாங்க என்ற தலைப்பில் மருத்துவமனையில் எஸ்பிபி சிகிச்சை பெறும் படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் எஸ்பிபி கட்டை விரலை உயர்த்தி காட்டி இருக்கிறார்.
எஸ்பிபியின் உடல்நிலை குறித்து கவலைதோய்ந்த முகங்களுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு மனோபாலாவின் இந்த படம் பெரும் நம்பிக்கையையும் ஆறுதலையும் தந்துள்ளது..