நாளை முதல் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தும் மன்சூர் அலிகான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிழைப்புத் தேடி தமிழகத்திற்கு வந்த வேறு மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் நாளை காலை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்த போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: வேலை செய்வதற்காக வடமாநிலம், தென் மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமையை கொடுக்கக் கூடாது.

தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் நாளை காலை 8 முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த போகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications