Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் மன்சூர் அலிகான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மன்சூர் அலிகான் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் - 2026 பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் முகாம்கள் அமைத்தும், வாக்குசாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்றும் வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை, வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.

mansoor ali khan SIR Chennai

பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்க டிசம்பர் 11-ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் முடிந்து டிசம்பர் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆட்சேபனைகள் இருந்தால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நாள் முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும்.

இந்நிலையில் பிற மாநிலத்தவருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை தரக்கூடாது என வலியுறுத்தி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். சென்னை எழும்பூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான், சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

வேலைக்காக வந்த வேறு மாநிலத்தவருக்கு, தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்க கூடாது என்று மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார். எஸ்.ஐ,.ஆர் பணிகளை நிறுத்தும் வரை போராட்டத்தை நிறுத்தமாட்டேன் எனக் கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.

"தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகள் இல்லாத மிகப்பெரிய ஆபத்து தாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழ்நாட்டிற்கு வடமாநிலங்களில் இருந்து பிழைக்க வந்தவர்கள் பிழைக்கட்டும். சந்தோஷம், அவர்கள் எதிரிகளும் அல்ல. ஆனால், அவர்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு உரிமை கொடுக்கக்கூடாது" என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் காலரவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+