சர்ச்சைகள் சூழும் நேரத்தில்.. சட்டென சனாதனத்தை கையில் எடுத்த மன்சூர் அலிகான்.. பிரஸ்மீட்டில் ஆவேசம்
சென்னை: உதயநிதி சனாதனம் குறித்து அப்படி என்ன பேசிட்டாருனு இவங்க எல்லாம் விமர்சித்தாங்க என நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 4 மணி நேரத்தில் நடிகர் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பை திரும்ப பெற வேண்டும். என்னை அழைத்து என்ன நடந்தது என கேட்க வேண்டும். இது தான்என் கோரிக்கை.

நான் பேசிய விஷயத்திற்கு யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னை அவதூறுப்படுத்தி வருவதற்கு அவர்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் மான நஷ்ட வழக்கு போட்டாலும் போடுவேன். அப்படியெல்லாம் சாதாரணமாக விடமாட்டேன். இது போல் என் விஷயத்தை பெரிதாக்குவோர் யார் என்பதை அறிய எனக்கு நேரமில்லை.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும். நடக்க போகுது, நாடாளுமன்றத் தேர்தல் வேறு வர போகுது! மத்தியில் பாஜக மிகப்பெரிய பித்தலாட்டம் செய்து வருகிறது.
தமிழகத்தில் கூட மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். என்னை பற்றி பேசுகிறார்களே! தம்பி உதயநிதி சனாதனத்தை பற்றி என்ன தப்பா பேசிட்டாரு. அவரே ஒரு இந்துதான். ஆனாலும் அவர் மீது விமர்சனம் செய்தார்களே! உதயநிதி ஒரு வார்த்தை சொன்னதை வச்சி எப்படி பிழைப்பை ஓட்டினார்கள். அப்படித்தான் என்னை வைத்தும் செய்கிறார்கள்.
குஷ்பு யாரையும் உசுப்பேற்றாமல் ரூம் போட்டு யோசிங்க. மன்சூர் அலிகான் உங்களையும் சேர்த்துத்தான் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன். தமிழக அரசியலில் ஒரு புல்லை கூட இவர்களால் பிடுங்க முடியாது. தமிழகத்தில் காங்கிரஸ்தான் ஜெயிக்கும். இவ்வாறு மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
லியோ படத்தில் த்ரிஷா நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் மன்சூர் அலிகான் நடித்தார். அதில் விஜய் குறித்து பிளாஷ்பேக் சொல்லும் காட்சி அவருக்கு கொடுக்கப்பட்டது. சில நிமிடங்கள் சனாதனம் பற்றி உதயநிதி அப்படி என்ன தப்பா பேசிட்டாரு.. என நிருபர்களிடம் மன்சூர் அலிகான் ஆவேசப்பட்டார்.












Click it and Unblock the Notifications