தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய மன்சூர் அலிகான்! ஊர் நியாயம் பேசினா போதுமா?.. நெட்டிசன்கள் கேள்வி
சென்னை: குடியரசு தினத்தையொட்டி நடிகர் மன்சூர் அலிகான் தனது அலுவலகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிய போது தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றி வைத்தார். முன்னதாக முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை முர்மு ஏற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திறந்த ஜீப்பில் ஜெய்ப்பூர் நகரத்தை மேக்ரானுக்கு சுற்றி காட்டிய பிரதமர் மோடி, மசாலா டீ வாங்கிக் கொடுத்தார். இந்த விழாவையொட்டி டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசுத் தினத்தையொட்டி கல்வி நிலையங்கள், மாவட்ட அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அந்த வகையில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் தனது அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார்.
அப்போது தலைகீழாக அவர் கொடியேற்றியதை அடுத்து அருகே இருந்தவர்கள் சுட்டிக் காட்டினர். பின்னர் உடனே கொடியை கீழே இறக்கி மீண்டும் சரியாக கொடியை ஏற்றினார். அரசியல் தலைவராக இருப்பவருக்கும் மற்ற நியாயங்களை பேசும் இவருக்கும் தேசியக் கொடியை கூட சரியாக ஏற்றத் தெரியாதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்.












Click it and Unblock the Notifications