மனசுக்குள் ஜில் ஜில் ஜில்.. தமிழ்நாட்டில் விடிய விடிய கொட்டிய கனமழை! குளிர்ந்த திருச்சி, ராமநாடு
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்து இருக்கிறது. குறிப்பாக அதிக மழைப்பொழிவு இல்லாத திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து உள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டித்தீர்த்து இருக்கிறது. டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் என பரவலாக நல்ல மழை பெய்து இருக்கிறது. மழைப்பொழிவு குறைவாக இருக்கும் ராமநாதபுரம், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள தகவலில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரை அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 53 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்து உள்ளது. கடலூரில் 49 மில்லி மீட்டர் மழையும், புதுச்சேரியில் 43 மில்லி மீட்டர் மழையும், மதுரையில் 34 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளது.
அதேபோன்று கொடைக்கானலில் 29 மில்லி மீட்டர் மழையும் திருச்சியில் 24 மில்லி மீட்டர் மழையும், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 20 மில்லி மீட்டர் மழையும், நாகப்பட்டினத்தில் 16 மில்லி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் வால்பாறையில் 15 மில்லி மீட்டர் மழையும் கொட்டியுள்ளது.
சென்னையில் சுற்றுவட்டார பகுதிகளில் ஓரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. காஞ்சிபுரம் கட்டப்பாக்கத்தில் 6 மில்லி மீட்டர் மழையும், எம்.ஆர்.சி. நகரில் 1.5 மில்லி மீட்டர் மழையும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 1 மில்லி மீட்டர் மழையும் மாதவரத்தில் 1 மில்லி மீட்டர் மழையும், நந்தனத்தில் 0.5 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளது.
நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்." என்று குறிப்பிட்டு இருந்தது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications