ஜெ. சமாதியில் திருமணம்.. சுவாதி கழுத்தில் சந்தோஷமாக தாலி கட்டிய ஜெயதேவன்.. இப்படியும் ஒரு பக்தர்
ஜெயலலிதா சமாதியில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.
சென்னை: "எனக்கு பேரு வெச்சதே இவங்கதான்.. எங்க குடும்பமே விரும்பற ஒரே தலைவியும் இவங்கதான்.. அதனாலதான் இவங்க பிறந்த நாளைக்கு இங்க வந்து கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கேன்" என்று இளைஞர் ஜெயலலிதா சமாதியில் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அதிமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் சமாதிக்கு ஒரு புதுமண தம்பதி தங்களது பெற்றோர், உறவினர்களுடன் வந்திருந்தனர். சமாதியை மணமக்கள் தொட்டு கும்பிட்டனர். பிறகு இளைஞர் தாலி எடுத்து மணப்பெண் சுவாதியின் கழுத்தில் கட்டி கல்யாணம் செய்து கொண்டார். இதுபற்றி விசாரித்தபோது இளைஞர் சொன்னதாவது:
"சென்னை 63-வது வட்ட அதிமுக பொருளாளரின் மகன் நான். என் பெயர் ஜெயதேவன். 1990-ல் ஜெயலலிதா அம்மா ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தார். அப்போது குழந்தையாக இருந்த என்னை என் அப்பா, அவங்ககிட்ட கொடுத்து பேர் வைக்க சொன்னார். அவங்கதான் எனக்கு ஜெயதேவன்-ன்னு பேர் வெச்சாங்க. எனக்கு பேர் வெச்சதால மட்டும் இல்ல, எங்க குடும்பத்துல எல்லாருமே விரும்பும் தலைவி அவங்கதான்.

அவங்க முன்னிலையில் என் கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்பட்டேன். அதனாலதான் அவங்க இறந்துட்டாலும், அவங்க சமாதியில வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இன்னைக்கு அவங்க பிறந்த நாள்.. இதனால அவங்களே எங்களை நேரில் வாழ்த்துவது போல இருக்கிறது" என்றார் மாப்பிள்ளை ஜெயதேவன்.
இருந்தாலும் சரி.. இறந்தாலும்சரி.. கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே மவுசு இன்னமும் நீடித்து இருக்கிறது என்றால் அது ஜெயலலிதாவுக்குதான்!!
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications