பாஜகவுக்கு எதிராக வியூகம்?.. எடப்பாடியாரே! நீங்கள் செய்வது நியாயம் இல்லை.. ஓபிஎஸ் ஆதரவாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷாவை கடந்த மாதம் டெல்லியில் சந்தித்து பேசியிருந்த நிலையில் அவர் மீது எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் அதிருப்தி ஏன் என மருது அழகுராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்த போட்டி இரு தலைவர்களான ஓபிஎஸ்ஸுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே போட்டி நிலவியது. இந்த போட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக அளவில் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

இதனால் பொதுக் குழு கூடி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. அப்போது ஓபிஎஸ்ஸை அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அது போல் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி உள்ளிட்டோர் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் நீக்கினார். அதிமுகவில் டெல்லி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படியே எல்லாம் நடக்கும் என சொல்லப்படுகிறது. அதற்கேற்ப அதிமுக பிளவுப்பட்டு ஒன்றிணைந்த போது துணை முதல்வர் பதவியை தான் வேண்டாம் என கூறிய போது அதை ஏற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிதான் வற்புறுத்தினார் என ஓபிஎஸ் தெரிவித்திருந்ததிலிருந்தே தெரிகிறது.

அதிமுகவில் பிரச்சினை

அதிமுகவில் பிரச்சினை

இதனால் அதிமுகவில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் டெல்லி தலைமை முடிவுக்கு கட்டுப்பாடுவார்கள் என விமர்சிக்கப்படுகிறது. தற்போது ஓபிஎஸ்ஸுக்கும் எடப்பாடிக்கும் இடையே பிரச்சினை எழுந்த போது கூட இருவருமே பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் சந்திக்க முயற்சித்தனர். இதில் டெல்லி தலைமையின் ஆதரவு ஓபிஎஸ்ஸுக்குதான் என தெரிகிறது.

அதிமுக விவகாரம்

அதிமுக விவகாரம்

இந்த நிலையில் அதிமுக விவகாரம் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. தேர்தல் ஆணையம் என்ன முடிவ எடுக்கும் என தெரியவில்லை. இந்த நிலையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர். இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டிருந்த நிலையில் இருவரையும் அருகருகே நிற்க வைத்து பிரதமர் மோடி சந்தித்திருந்தார். அது போல் தமிழகம் வந்த அமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்தார். ஆனால் எடப்பாடி அவரை சந்திக்காதது ஏன் என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தனியார் நிகழ்ச்சி

தனியார் நிகழ்ச்சி

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட போது தனியார் நிகழ்ச்சிக்கு சென்னை வந்த அமித்ஷாவை சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறினார். இதன் காரணமாக பாஜக மீது எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தி எழுந்ததாக தெரிகிறது. ஓபிஎஸ்ஸுக்கே டெல்லி தலைமை முக்கியத்துவம் கொடுப்பதால் எடப்பாடி அதிருப்தியில் இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.

நியாயமில்லை

நியாயமில்லை

இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளரும் கொள்கை பரப்பு செயலாளருமான மருது அழகுராஜ், அதிமுகவை பொருத்தமட்டில் பாஜகவுடன்தான் கூட்டணி. இந்த கூட்டணியை முறித்துக் கொள்ள எந்த காரணமும் இல்லை. மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் கடந்த மாதம் சென்று எடப்பாடி சந்தித்து பேசினார், ஆனால் ஒரே மாதத்தில் அமித்ஷா மீது அதிருப்தியை வெளிப்படுத்த என்ன காரணம். எடப்பாடி பழனிசாமி அணியின் ஐடி பிரிவினர் பாஜகவை கடுமையாக விமர்சித்து சமூகவலைதளங்களில் கருத்து வெளியிடுகிறார்கள். பாஜகவுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதன் பேரில் ஐடி விங் இப்படி செய்கிறதா? எதுவாக இருந்தாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என்ற முடிவு செய்துவிட்ட நிலையில் இது போல் செய்வது நியாயமே இல்லை என மருது அழகுராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+