"ஆபாச வீடியோ இருக்கு.." தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்ற பாஜக நிர்வாகி மும்பையில் கைது!
சென்னை: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி அகோரம் என்பவரை மயிலாடுதுறை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமையான ஆதினங்களில் ஒன்று தருமபுரம் ஆதீனம். இந்த தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதி உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தருமபுரம் ஆதினத்தின் சகோதரரும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவஸ்தானத்தின் கணக்காளருமான விருத்தகிரி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
பணம் பறிக்க முயற்சி: அதாவது தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. தருமபுரம் ஆதீனத்தை வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டியதாகவும் அதற்கு செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ க தலைவர் அகோரம், மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன், செம்பனார்கோவில் ஆகியோர் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் முதற்கட்டமாகத் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத் (32) மற்றும் சீர்காழி ஒன்றிய பாஜக முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தாளாளர் குடியரசு (39), ஸ்ரீநிவாஸ் (28) ஆகியோரையும் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்தவர் கைது: இதற்கிடையே இதில் தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் சமீபத்தில் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். தன் மீது அரசியல் உள்நோக்கத்துடன் போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், இந்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி அகோரம் மயிலாடுதுறை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதற்கிடையே தனிப்படை போலீசார் தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி அகோரத்தை கைது செய்துள்ளனர். மும்பையில் அகோரம் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுத்தகட்ட நடவடிக்கை: இப்போது அவரை தமிழகம் அழைத்து வரும் நடவடிக்கையில் மயிலாடுதுறை போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரிடம் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீவிரப்படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். தன்னை மிரட்டி பணம் பறிப்பதாகத் தருமபுரம் ஆதீனம் அளித்த புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications