Mayor Priya: எம்எல்ஏ கனவில் சென்னை மேயர் பிரியா? சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வம்! எந்த தொகுதி தெரியுமா?
சென்னை: வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விருப்பமனு கேட்டு தாக்கல் செய்துள்ள மேயர் பிரியா, சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேயர் பிரியா மட்டுமின்றி துணை மேயராக உள்ள மகேஷ் குமாரும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளாராம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் திமுக விரைவில் தொகுதி பங்கீட்டை முடித்து, வேட்பாளர்களையும் தேர்வு செய்யவும் திட்டமிட்டு வருகிறது. கட்சியில் தற்போது விருப்பமனு பெறப்பட்டு வரும் நிலையில் பல சிட்டிங் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீண்டும் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறார்கள்.

மேயர் பிரியா போட்டியிடுகிறார்?
இதுதவிர புதுமுகங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் சில தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏக்களாக இருப்பவர்களுக்கு வாய்ப்பு இருக்காது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் மேயர் பிரியா போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
சென்னையில் முதல் தலித் பெண் மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு பிரியா பதவியேற்றார். சென்னை மாநகராட்சியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு வருடமே உள்ளது. இதனால், மாமன்றத்தில் கவுன்சிலராக இருப்பவர்களில் சிலரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறார்களாம்.
திருவிக நகர் தொகுதி
அதாவது 10- க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளார்களாம். குறிப்பாக சென்னை மேயராக இருக்கும் பிரியா, வட சென்னைக்கு தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
விருப்பமனு கேட்டு தாக்கல் செய்துள்ள நிலையில், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்து வருவதாக சொல்லப்படுகிறது. மேயர் பிரியா மட்டுமின்றி துணை மேயராக உள்ள மகேஷ் குமாரும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளாராம்.
புதுமுகங்களுக்கு வாய்ப்பு
துணை மேயர் மகேஷ் குமார் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருவதாக கூறப்படுகிறது. திருவிக நகர் தொகுதியில் இப்போது சிட்டிங் எம்.எல்.ஏவாக தாயகம் கவி இருந்து வருகிறார். சைதாபேட்டை பகுதியை சேர்ந்த தாயகம் கவிக்கு, திருவிநக நகர் தொகுதி தனித்தொகுதி என்பதால் அங்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் இந்த முறை திருவிக நகர் தொகுதி மேயர் பிரியாவுக்கு வழங்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. மேயர் பிரியாவும் திருவிநக நகரில் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. மேயர் பிரியா மட்டுமின்றி மேலும் சில கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று சொல்லப்படுவதால் இந்த முறை சென்னையில் சில தொகுதிகளில் புதுமுகங்களை பார்க்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து.. விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாராம்! -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 4 நாள் லீவை விடுங்க! ‘இதை’ மட்டும் கண்டிப்பாக மறக்காதீங்க! -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி












Click it and Unblock the Notifications